சனி, அக்டோபர் 30, 2010

மனசை கசக்கி பிழியாதீங்க ப்ளீஸ் ..

அடுத்தவங்க மனசை நோக அடிக்காதீங்க .

ப்ரீயாக கொடுத்ததை ஏளனம் செய்யாதீர்.

பிடிக்கவில்லையா தூக்கி தூர போடுங்க..


thanks acclaim images.com

அல்லது வேறு யாருக்காவது கொடுங்கள்..

 மாட்டுக்கு பல்லு இருக்கான்னு செக் பண்ணுவது

போல நேருக்கு நேர் , முகத்தில் அறைந்தது போல


திருப்பி கொடுத்து அன்பை முறித்து ,கெடுக்காதீர்கள்.

என்னடா பட்டாசு போல் பட பட வென்று வெடிக்கிறேன் !!

என்று பார்க்கிரீர்ர்களா?   சமீபத்தில் சந்தித்த ,கேட்ட சம்பவங்கள்

என்னை இப்படி எழுத தூண்டியது.மூன்று விதமான நெருக்கடிகள்.


ஒன்று
வீட்டு கிரக பிரவேசம்  வைபோகதில்  பெண்களுக்கு தாம்பூலத்து டன்
அனைவர்க்கும் ஒன்று போல சேலை,ரவிக்கை வாங்கி வைத்து
கொடுத்தேன் .மிகவும் நெருங்கிய சொந்தகார பெண் அந்த
விழாவுக்கு வரவில்லை,அவர்  கணவரிடம் அவருக்கு என் சார்பாக
கொடுத்து விடும் படி கூறி கொடுத்தேன் ..அவரும் மகிழ்வுடன்
எடுத்து சென்றார்.ஒரே வாரத்தில் அந்த பெண் இங்கு என்னை
பார்க்க வந்து இருந்த போது நான் கொடுத்த சேலையை என்னிடம்
திருப்பி கொடுத்து விட்டு ,தனக்கு அந்த சேலை பிடிக்கவில்லை
என்று நேருக்கு நேரே சொல்லி கொடுத்து சென்று விட்டார்.
பார்பவர்களிடம் எல்லாம் இதை பற்றி சொல்லி  என்னை குறை
கூறிக்கொண்டே இருந்தார். மிகவும் டென்ஷன் ஆகி விட்டேன்.!!
இரண்டு 
என் தோழி அவர் உறவுக்கார பெண் வீட்டுக்கு தன் கணவருடன்
சென்னை சென்று விடி காலை பொழுதில் வீட்டுக்கு போய்
உள்ளார்.வெறும் கையுடன் எப்படி போவது என்று அருகில்
நின்ற வாழை பழ வண்டி காரரிடம்  ஒரு சீப்பு பெரிய மோரிஸ்
 பழங்களை குழந்தையை சுமப்பது போன்று எடுத்து சென்று
சொந்தகார பென்னின் குழந்தைகளை  அழைத்து தந்து உள்ளார்.
உடனே அந்த நாகரீகம் தெரியாத பெண் ,வேண்டாங்க இந்த
பழம் எல்லாம் தயவு செய்து எடுத்து சென்று விடுங்க ,யாருக்கும்
பிடிக்காது ! தப்பாய் நினைக்காதீர்கள் என்று வேறு கூறி னாராம்.
இதில் வேடிக்கை என்ன வென்றால்... மோரிஸ் பழங்கள்
இவர்களுக்கு   மிகவும் பிடிக்கும் என்பதால் தான் வாங்கி சென்று
இருக்கிறார் என் தோழி. கடுப்பாகி அவர்கள் வீட்டில் வேலை
செய்யும் பென்னை  கூப்பிட்டு கொடுத்து விட்டு வந்தாராம்.
மூன்று 
என் அக்கா வீட்டு அருகே ஒரு பாஸ்ட் பூட் கடை உள்ளது .கூட்டு
குடும்பம்மாக ஒன்றாக கடையை கவனித்து வருகிறார்கள்.அந்த
வீட்டு அம்மா தன் மகள் வைற்று பேத்தி பெரிய மனுஷி ஆகி
விட்டாள்  ..என்று அக்கம் பக்கதினரை அழைத்தார்.என் அக்காவும்
சென்றார் .வெறும் கையுடன் போகாமல் தன் பேத்திக்கு என்று
சில புது சுடிதார்களை வாங்கியதில் , ஒன்றை எடுத்து சென்று அந்த
பென்னுக்கு பரிசாக கொடுத்து விட்டு வநாராம் !!  சில தினங்கள்
கழித்து அந்த வீட்டு அம்மா என் அக்காவை அழைத்து நீங்க உங்க
பேத்தியின் பழைய டிரஸ்சையா தந்தீர்கள்? பழசு போல காட்சி
அளிக்குது !!நல்ல டிரஸ்சாக வாங்கி தந்து இருக்கலாம் ..என்றாராம்.
அது லைட் கலர், அந்த அமாவுக்கு அப்படி தோன்றி இருக்கு...என்ன
செய்வது? எண்டா கொடுத்தோம் ?பணமாக கொடுத்து இருந்தால்
இந்த கடை ஏறி இறங்குவது ஆவது மிச்சம் ஆகும்.என்றார் என் அக்கா.!!

இதலாம் மிஞ்சும் வகையில் எங்கள் வீட்டு வேலை செய்யும் சாந்தி
இங்கோ ..போன வருஷம் மாதிரி லட்டு சிலேபி கொடுத்து இந்த
தீபாவளி யை  கெடுத்து விடாதீர்கள்.கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மைசூர்
பாகு மட்டும் ஒரு கிலோ வாங்கி தநதுருங்க.!!போதும்..நான் அட்ஜஸ்ட்
செய்து கொள்கிறேன். சேலைக்கு பணமா கொடுத்துருங்க ..நான் வாங்கி
கொள்கிறேன்.என்று மிரட்டி விட்டு சென்று இருக்கு, அதாவது சரி
சாப்பிடுவது தானே .. போகட்டும் என்று க்ருஷ்ண ஸ்வீட்ஸ் செல்கிறேன்!! 
gift box--click! 

வியாழன், அக்டோபர் 28, 2010

தீபாவளி வரிசை


  






தேங்க்ஸ் டு பத்மா கிட்சேன் (படம்)


தீபாவளி வந்து கொண்டே இருக்கு..

பொறந்த வூடு சீர் ..அதாங்க !! தீபாவளி வரிசை வச்சுடீங்களா? 

ஆமாங்க புரியலையா ? தஞ்சாவூர் பக்கம் இந்த பழக்கம் உண்டு!!

 தீபாவளி,பொங்கல் போன்ற விசேச தினங்கள் வருவதற்கு முன்பு

பெண்களுக்கு  பிறந்த வீட்டில் இருந்து அவரவர் சக்திக்கு ஏற்ப தங்கள்

வீட்டு பெண்களை நினைத்து ,சீரும் சிறப்பும் ஆக புகுந்த வீட்டில்

 வாழ  தங்கள் மகள் அல்லது  தங்கள் சகோதரிகள் சந்தோசத்துக்கு

 என்றும் அவர்களை நினைத்து தந்தை அல்லது சகோதரர் கடைசி

வரை பிறந்த வீட்டு சீராக தீபாவளி, பொங்கல் வரிசை என்று  ஒரு வாரம்

 முன்பே அவர்கள் வீட்டுக்கு சென்று அவர்களை பெருமை படுத்துவது

 தான் இந்த விழா வைபோகம்...தொலைவில் இருபவர்களுக்கு ,பணம்

மனி ஆர்டர்   செய்வது இபோது நடை பெற்று வரு கிறது..மூன்று முதல்

 எத்தனை தாம்பாளங்கள் வேணுமானாலும் நம் வசதிக்கு ஏற்ப வரிசை

 வைக்கலாம் நம் குடும்ப பெண்களுக்கு !! பொறந்த வீட்டு சார்பாக.!!!

இந்த வழக்கம் இப்போது அனைத்து வூர்களிலும் பின்பற்றபடுகிறது.


 என்ன எங்கே கிளம்பிடீங்க? ..  பொறந்த வீட்டு சீர் அதான் தீபாவளி

வரிசை வைக்கவா?!!..போங்க  போங்க உங்க வீட்டு பெண்கள் 

உங்க வருகையை எதிர்பார்த்து காத்து இருக்காங்க!!!சீக்கிரம் ப்ளீஸ்..


தஞ்சாவூர் சைடு இன்னும் ஒரு விசேசம் உண்டு !!

அதாவது  முதல் முறையாக கல்யாணம் ஆகி பெண்

வீட்டுக்கு வரும் மாப்பிள்ளை மற்றும் அவரை சேர்ந்த 

சொந்த பந்தங்களுக்கு கொடுக்கும் விருந்து சாப்பாட்டில்

இலைக்கு அவரவர் தகுதிக்கு ஏற்ப பணம் நகை வைப்பது

வழக்கம் !!அதுவும் மாப்பிளைக்கு ஸ்பேஷசல் கவனிப்பாக 

தங்கம் ,வெள்ளி அல்லது ரொக்கம் 5 முதல் 10 ஆயிரங்கள்

வரை இலையில் வைப்பது கௌரவம் ..என்று கூறுகிறார்கள்.

என் தோழி வீட்டு கல்யாண வைபோகத்தில் இதை தெரிந்து

கொண்டேன்.அவர் வீட்டு விருந்தில் இந்த பழக்க வழக்கம்

தெரியாமல் கையை பிசைந்து கொண்டு நின்று இருந்தவரை

அவர் வீட்டு மாப்ளை இது பற்றி எடுத்து சொல்லி தன்னிடம்

உள்ள பணம் நகைகளை கொடுத்து இலையில் வைக்க சொல்லி  

பிரச்னையை சுமுகமாக கையாண்டுள்ளார்...சபாஷ் மாப்பிளை..

அது வரை விருந்தில் யாரும் கை நனைக்க முன் வர வில்லை...

உறவுகள் தொடர.. இது போல் வழகங்ககளை ஈஸி யாக  கை

ஆள தெரிந்து இருப்பது மிக அவசியம் ஆகும். பிரச்சனைகளை

ஊதி பெரிது படுத்தாமல் , ஒருவராவது விட்டு கொடுத்து அரவணைத்து

சென்றால் மட்டும் ... வாழ்கை சக்கரம் ஸ்மூத் ஆக சுழலும் ..இனிக்கும்.!!

திங்கள், அக்டோபர் 25, 2010

பரபரப்பு




அவசரம் !! ஓடு..ஓடு ..ஓடி கொண்டே இரு !!

எப்ப நிற்கும் இந்த பரபரப்பு ? இந்த ஓட்டம்?

அப்பாடா என்று நம் வாழ்கையில் எப்போ வரும்?

இது சாத்தியமா? வாழ்கை சக்கரம் சுழன்று கொண்டு

இருக்கு !! நாமும் ஒட்டமும் நடையுமாக சுழற்சிக்கு

ஏற்ப சுழன்று கொண்டு இருக்கிறோம்.!!எப்ப ரெஸ்ட் ?

என்று மனம் ஏங்கும்.கூடுதலாக வேலை பார்க்கும்

பெண்களுக்கு வீட்டையும், அலுவலகதையும் இரண்டு

கண்களாக பாது காக்க வேண்டிய சூழ்நிலை !!எப்படி

சமாளிப்பது? எப்படி எதிர் கொள்வது ? ஒரே பரபரப்பு ...

அதுவும் காலை நேர பரபரப்பு இருக்குது பாருங்க ...

அட அப்பா ...ஓவ்வரு வீட்டிலும் ஓவ்வரு பரபரப்பு.

என் கூட வேலை பார்க்கும் ஜெயா..நீ எப்படி சனிகிழமை

கூட இவ்வளவு பிரெஷ் ஆக வந்து இருக்கிறாய்?என்று

கேட்பாள் ..போன வாரம் வீட்டில் காஸ் அடுப்பை மூடினேனா ?

என்று பரபரப்பாக இரண்டு மணி நேரம் பெர்மிசஷன் போட்டு

விட்டு ,வீட்டுக்கு போய் செக் செய்து பின்பு ஆபிஸ் வந்தார்.!!

அழகு நம் கையில் என்ற விவெல் சோப்பு விளம்பரம் போல 


பரபரப்பு நம் கையில் தான் உள்ளது!!சரியாக திட்டம் இட்டால்,


வெற்றி நமக்கு தான்!! என்ற தாரக மந்திரம்.தான் இதுக்கு வழி!

சமீபத்தில் பெங்களூர் செல்ல ட்ரைன் ஏறினேன் .ட்ரைன் கிளம்ப

ஆய்தம் ஆனவுடன் ஸ்லொவ் மோஷன் ல் ஒரு தம்பதி ஓடி வந்து

ஏறினேர்..மூச்சு இரைக்க நின்றனர் ..டி டி ஆர் டிக்கெட் கேட்க இருவரும்

ஒருவருக்கொருவர் டிக்கெட் எடுத்து வரலையா என்று கேட்டு கொண்டு

கடைசியில் சண்டை இட ஆரம்பித்து ,டி டி ஆர் ஒரு வழியாக இருவரயும்

வண்டியை விட்டு இறங்க சொல்லி ..அபராதம் கட்ட சொல்லி விட்டார்.

 ஸ்கூல்/காலெஜ் ல் ..டே ப்ளநேர் ,இயர் ப்ளநேர் என்று திட்டம் இடுவோம் .

அது போல் நாமும் அன்றாடம் என்ன செய்ய போகிறோம் என்று சிறு

குறிப்பு எடுத்து கொள்ள வேண்டும.முக்கியமாக நாம் செய்ய வேண்டிய

வேலைகளை ரெமெயின்டேர் அல்லது சிறு டைரி யில் இன்று என்ன

எல்லாம் செய வேண்டும் என்பதை முன் கூட்டீயே பிளான் பன்ண

வேண்டியது அவசியம்.டைம் மேனஜ்மென்ட் மிகவும் முக்கியம்.

குறிபிட்ட நேரத்தில் வேலைகளை முடிக்க தெரிந்து இருக்கனும்.  

நேரம் வீனாகுவதை உணர வேண்டும்.முடிக்க முடியா விட்டால்..

அதை பெண்டிங்கில் வைத்து விட்டு அடுத்து திட்டம் இட்ட

 வேலைகளை செய்ய ஆரம்பிக்க வேண்டும்.எறும்பு எப்படி 


மழை  காலத்துக்கு உணவை பத்திர படுத்து கிறதோ ,அது போல்

நாமும் அன்றாட வேலைகளை உடனுக்கு உடன் திட்டம் இட்டு

முடித்து ரிலாக்ஸ்  ஆக பரபரப்பு இல்லாமல் நிம்மதி யாக மூச்சு

விடலாம். நேரத்திற்கு நம் வேலைகளை கை ஆளலாம் சந்தோசமாக !

பரபரப்புக்கு காரணம் :

எடுத்த பொருளை எடுத்த இடத்தில வைக்காமல் தேடுவதில்...

வேலைகளை தள்ளிபோடுவது..

சோம்பேறி தனமாக பொறுப்பு இல்லாமல் இருப்பது..

மனம் போன போக்கில் இருப்பது.!

திட்டம் இடாமல் விட்டேதேரியாக இருபது.

மொபைல், மற்றும் டிவி ,கம்யு ட்டரில் நேரத்தை கொல்வது..

கடை சி நிமிஷம் வரை எதயும் கண்டு கொள்ளாமல் இருப்பது.

எல்லாம் எடுத்து கொண்டோமா என்று சரி பார்க்காமல் உள்ளது.

கனவில் எப்போதும் வாழ்வது.

ஊர் வம்பு நியாயம் பேசி நேரத்தை வீண் அடிப்பது ..

இதை வெல்வது எப்படி ?

இரவு படுக்க போகும் முன்பு இன்று என்ன செய்தேன்?
பெண்டிங் வேலைகள் என்னவெல்லாம் உள்ளது?
என்று படுத்தவுடன் பத்து நிமிடம் இன்று நடந்தவைகளை
ஒரு கன்நோட்டமாக  மனதில் அசை போடுங்கள்.

காலை கண் விழித்தவுடன் நேற்று பெண்டிங் வேலைகள்
மற்றும் இன்று எனவெல்லாம் செய்ய வேண்டும் ?
எதை சீக்கிரம் முன்னதாக முடிக்க வேண்டும்.
என்று மனதில் பட்டியல் போட்டு கொள்ள வேண்டும்.

மனிதனுக்கு குறைந்தது 6 -7 , மணி நேரம் உறக்கம் வேண்டும்.
அபோது தான் இவை எல்லாம் வொர்க் அவுட் ஆகும்.
இல்லாவிட்டால் எல்லாம் பரபரப்பில் தான் கழிய வேண்டும்!!



செய்தால் மனமும் உடலும் உற்சாகமாக இருக்கும்.!
பிறகு என்ன பரபரப்புக்கு ஒரு குட் பய் தான்,.

வெள்ளி, அக்டோபர் 15, 2010

செவ்வாய், அக்டோபர் 12, 2010

பொம்மை












என் வீட்டு கொலுவுக்கு வந்தவர்கள் எல்லாம் நீங்க பொம்மை
எங்கு வாங்குவீர்கள் என்று கேட்கிரர்ர்கள்!! காரணம் அனைத்தும்
பழய பொம்மைகள்..லட்சணமாக அழகாக காட்சி தருகிறது.!!
இருபது வருடங்களுக்கு முன்பு கபாலீஸ்வரர் கோயில் வாசலில்
வாங்கியது.!! உயரமான பொம்மைகள்.,தத்ருபமாக தோன்றுகிறது.
வன்னங்கள் கூட மாறவில்லை!! அன்று வாங்கியது போல் இரூக்கு.    















சரஸ்வதி,ஆயூத  பூஜை  ,வைஜய்தசமி அன்று பொம்மைகள்
குறைந்த விலையில் வாங்கி அடுத்த வரும் கொலுவுக்கு
ரெடி பண்னலாம். பொம்மைகளை பராமரிப்பது ஒரு வித கலை.
கொலு முடிந்ததும் பொம்மைகளை ஓவ்வன்றும் எடுத்து பழய
காட்டன் துணியில் சுற்றி ஒன்றோடு ஒன்று உரசாமல் கவனமாக
கள்ளி பெட்டிகளில் அடுக்கவேணும.  துணி சுற்றிய பொம்மை மீது
நியூஸ் பேப்பர் போட்டும் கவர் செய்தும் வைக்கலாம்.!! புது பொம்மை
போல் காட்சி அளிக்கும்.மூக்கு ,கை,இவைகள் உடையாத வன்னம்
பார்த்து கொள்ள வேண்டும்.கவனமாக கை ஆளுவது அவசியம்.!















 இந்த வருட கொலு கலாட்டா  
 பொம்மைகளை  இறக்கிய வேகத்துடன் கொஞ்சம் ரிலாக்ஸ்
பண்ணி கொண்டு மலையம்மா இந்த பொம்மைகளை கொஞ்சம்
துடைத்து ஓரமாக வையுங்கள் ..இதா வந்து விடுகிறேன் என்றேன்.

என்திரன் பாணியில், மலையம்மா பொம்மைகளைஎடுத்து வாளியில்
அடுக்கி குழாய் அடியில் கழுவ எடுத்து சென்றதை என் கணவர் பார்த்து
விட்டார்..ஒரு நிமிடம் தாமதித்து இருந்தால் அவ்ளோதான் !!பொம்மை

 எல்லாம் சில் நொடிகளில் கரைந்து இருக்கும்.கொலு அம்பேல் தான்..
நல்வேளை உடனே பின் தொடர்ந்து சென்று மலையம்மா கையில்
இருந்து வாளியை பிடுங்காத குறையாக பறித்து கொண்டு வந்தத பிறகு
தான் எனக்கு உயிரே வந்தது.பாவம் மலயம்மமாக்கு, சிட்டி ரோபோ போல்
தெளிவாக சொல்லி  இருக்கனும் என்று   நாங்கள் உனர்ந்தோம் !

சனி, அக்டோபர் 09, 2010

வாங்க எங்க வீட்டுக்கு.. கொலு பார்க்க..!!!

அப்பாடா நானும் கொலு வச்சிட்டேன் ..

  என்றன்  வீட்டுகாரர் ஆசை ஆசையாய் பிஜியில்
இருந்து எங்களை பாக்க ஓடோடி வந்துள்ளார்..
இந்த நேரம் பார்த்து நவராத்திரி கொலு வந்திருக்கு.
நான் வேறு சகோதரர்கள் எல்லாம் உங்க வீட்டு
கொலுவில்   உங்க அம்மநிகளுக்கு கூட மாட
உதவி செயுங்கனு என் முந்தய பதிவில்  எழுதி
விட்டேன்..அதை பார்த்து விட்டு, என் கணவர்
வரிந்து கட்டி கொண்டு கொலு படிகளை
இறக்கி தூசி தட்டி   ஆங்கில், screw , nut , போல்ட்
என்று வீடு முழுவதும் போர் களம் ஆனது..

 இரண்டு வருடங்களாக சிம்பிளாக பூஜை அறையில்
கொஞ்சம் பொம்மைகள் மட்டுமே வைத்து கும்பிட்டோம்.
இந்த வருடம் எங்க ஊட்டுகாரர் வரார்ன வுடன் ஒரே
உற்சாகம் !!படி கட்ட ஆரபித்த வுடன் தான் தெரிந்தது ,
ஆங்கில், screw , nut , போல்ட் எல்லாம் துரு ஏறி  பல்லை
காட்டியது , அந்த படியை  இப்படி பிடி, தூக்கு மேலே..நல்லா
டைட் பண்ணு என்று ஏகப்பட்ட உத்திரவு.!!இரவு இரண்டு மணி
ஆனது தான் மிச்சம்.கொலு படி ரெடி ஆன   மாதிரி சுவடே இல்லை .

என்னுடைய கொலு படி டூ இன் ஒன்.மற்ற நேரம் அதை ராக் ஆக
யூஸ் பண்னலாம். .அதில் இருந்த சாமான்கள் எல்லாம் கீழே
இறக்கி வைத்து ரூம் முழுவதும் பரப்பி கிடந்தது. என் மகள்
இதலாம் ஒத்து வராது நமக்கு, பேசாமல் போன வருடம் போல்
சாமி ரூம்ல சின்னதா வை அம்மா..என்று தூங்க சென்று விட்டாள்.

என் கணவர் நோ நோ !! மேல இருந்து படிகள் எல்லாம் எடுத்தாச்சு ..
முன் வைத்த காலை பின் வைக்க மாட்டேன் என்று பிடிவாதமாக
இருந்து முழு மூச்சாக பல மணி நேரம் போராட்டம்களுக்கு
பின்பு , ஒரு வழியாக விடிய விடிய கொலு படி தயார் செய்து  தந்தார்.

பிலாக் காபி போடு, விசிறி விடு என்று  ஒரே அமர்க்களம் ..!!
சும்மா     பெண்டு  கலண்டு விட்டது.. இருவருக்கும்..ஆனாலும்
பொம்மைகள் அடுகியவுடென், களைப்பு எல்லாம் பறந்து விட்டது.
என் மகள்.. அப்பா படி கட்டி விட்டார்களா? என்றாள் ஆச்சரியத்துடன்.  

இத்லிருந்து நான் கற்று கொண்ட பாடம் ..விடா முயற்சி.
அடுத்தது படிகளை பிரித்து அடுக்கும் போது லெப்ட் ஆங்கில்.
ரைட் அன்கிள் மார்க் செய்து தனி தனி யாக கட்டி வைக்கணும்.
பேஸ் ஆரம்பிக்கும் போது கீழே இருந்து ஆரம்பித்து ஒன்றுடன்
ஒன்று சேர்த்து கோர்க்க வேண்டும் !! அப்போது தான் screw ,
டைட் ஆக உட்காரும். ஆடாமல இருக்கும்.டைம் மிச்சம் ஆகும்!!

பொம்மைகளும் பாக் பண்ணி வைக்கும் போது அதன் மீது
பெயர்கள் எழதி வைத்தால் .. எடுப்பது சுலபம். களைப்பு
இல்லாமல் ..உற்சாகமாக வேலையை ஆரம்பிக்கலாம்.

அப்பாடா..அடடா .. கொலு வைத்தாச்சு ..அப்புறம் என்ன ?
வாங்க எங்க வீட்டுக்கு.. கொலு பார்க்க..!!!

 

வெள்ளி, அக்டோபர் 08, 2010

நிஷா









 நான் பிஜி சென்ற சமயம் நிஷா வை  சந்தித்தேன்!
என் கணவர் நிஷா meet my wife , கீதா என்றார்.
ஓடி வந்து கட்டி தழுவி முத்த மழைகளால் ஆசையாக
என்னை வரவேற்றார். திஸ் இஸ் நிஷா my ஹவுஸ் கேர்ள்
.( Cook Maid )என்று நிசாவை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார்.
அவர் I am an ' இந்தியன் from சவுத்  '  என்று மிகவும் பெருமையுடன் சொன்னார் .
நானும் மிக்க மகிழ்ச்சியுடன் பாசத்துடன்  ஆர்வமாக நமது மொழியில் பேச ஆரம்பித்தேன் ...,   பிறகு தான் தெரிந்தது ... அவர்கள்ளுக்கு தென் இந்தியா மொழிகள் எதுவம் தெரியாது என்று...! என் கணவர் பின்பு  தெளிவு படுத்தினர் . அவர்கள் அனைவரும் 'இந்தோ பிஜியன் ' , ஆனால் இந்தியாவை நேரில் பார்த்தது இல்லை என்று. இது மிகவும் வியக்க தக்க விஷயம் ... அது  பற்றி நான் இன்னொரு நாள் பார்க்கலாம் .



இரண்டு நாள் அவர் சமைத்த உணவை சாபிட்டு விட்டு
நாக்கு செத்து விட்டது. எப்படிதான் இவர் சமாளிக்ரர்..பாவம், சரி ..  , நம் கைங்கிரியத்தை காட்ட வரிந்து கட்டி கொண்டு சமயல் அறைக்கு சென்று அரிசி பருப்புதேட ..ஒட்ஸ்,ப்ரெட் wheat பிக்ஸ், க்ரம்ப்ஸ் &
மற்றும் காய்ந்தரொட்டி மட்டுமே இருந்தது.அன்று மாலை என்
கணவரை அழைத்து கொண்டு சூப்பர் மார்க்கெட் சென்று அரிசி பருப்பு
என்று நம் இந்திய உணவுக்கு தேவையான இட்லி அரிசி முதல்
அனைத்து item கிடைத்த திருப்தியில் முழு மூச்சாக சமையல்
ஹோதா வில் இறங்கி இட்லி சாம்பார், தயிர் வடை பிசி பேலா
என்று தினம் ஒன்று செய்து நிஷாவை அசத்தி விட்டேன்.என்
கணவரும் நீ போவதற்குள் நிஷாவுக்கு நம் சமையல் எல்லாம்
சொல்லி கொடுத்து  பழக்கி விடு, என்று கூறினார். 

யோகர்ட்  (தயிர்) அங்கு மிகவும் காஸ்ட்லி ..தயிர் பிறை ஊற்றி
வைத்தேன்.நிஷாவுக்கு ஒரே சந்தோசம். அடுத்த நாள் நான் தயிர்
தயாரிக்கிறேன் என்று கூற , பாலை தயிரில் ஊற்றவா? தயிரை
பாலில் ஊற்றவா? என்று நான் ஷாப்பிங்  காம்ப்ளெக்ஸ் ல் purchase
செய்து கொண்டிருக்கும் போது நிஷாவிடம் இருந்து போன்...
பாலில் தயிரை ஊற்று என்று சொலி விட்டு மாலை சாப்பிடும்
போது வீட்டில் தயிரை தேட  ஒரு டம்லர் தயிரை பாலில் கொட்டி
பொங்க வைத்து விட்டது அப்போது தான் தெரிந்தது.....

அடுத்து இட்லிக்கு ஆப்பத்துக்கு மாவு ரெடி செய்ய சொல்லி விட்டு
கண் அயர்ந்தேன் !!   எழுந்து பார்தால் !!! இட்லி மாவு கரேல் என்று
கருப்பாக இருந்தது. உளுந்து தோலை கலைந்து எடுக்காமல்
அப்படியே போட்டு ஆட்டி உள்ளது  தெரிந்தது ..அப்புறம் என்ன
மறு நாள் கருப்பு இட்லி தான் போங்க....இருவரும் விழுந்து
விழுந்து சிரித்து வயிறு வலி வந்தது தான் மிச்சம்.

என்னுடைய புண்ணியத்தில் மீதி நாட்கள் அனைத்தும் நிஷா
கால் மேல் கால் போட்டு கொண்டு சப்பு கொட்டி கொண்டு 
அதை செய் உன் கணவருக்கு இதை செய் என்று அன்பு கட்டளை
வேறு... என் கணவருக்கு பிடித்ததை சமைபதை  விட நிஷாவுக்கு
சமைத்தது  தான் அதிகம்..அது வேறு விசயம். 

நம்ம ஊரில் வேலை செய்யும் பெண்களிடம் வேலை வாங்குவதே
மலையை பிளப்பது போன்ற விசயம் ..வெளி நாடுகளில் வீட்டு வேலை
செய்யும் பெண்கள் நம் நாட்டு பெண்மணிகளை மிஞ்சி விடுகிறார்கள் !!
டிமிக்கி விட்டு விட்டு நம்மை வேலை செய்ய வைத்து வேடிக்கை பார்ப்பதில்
விவேகமாக இருக்கிறார்கள் !!

இன்னும் எமிலி, எக்னேஸ் எல்லாம் பற்றி அடுத்த பதிவில் பகிர்கிறேன்!

செவ்வாய், அக்டோபர் 05, 2010

நவராத்திரி


 
  
வந்துவிட்டது நவராத்திரி...ஏறுங்க  பரண் மேல , 
பொம்மையை இறக்கி தூசி ,தட்டுங்க..சகோதரர்கள் 
எல்லாம் ப்ளீஸ் கூட மாட ஹெல்ப் பண்ணுங்க !!!


navarathri scraps greetings images for orkut, facebook


புரட்டாசி  மாதத்தில் வளர்பிறைப் பிரதமை முதல்
நவமி வரை ஒன்பது நாளும் அனுஷ்டிக்கப்படும்.

நவராத்திரியில் துர்க்காதேவி மகிஷாசுரனுடன் எட்டு
நாட்கள் போர் செய்து ஒன்பதாம் நாள் போரின்போது
மகிஷாசுரனை வதம் செய்தாள் என்றும் இது நவமியில்
நிகழ்ந்ததாகவும் மறுநாள் தசமியில் தேவர்கள் வெற்றியை
ஆயுத பூசை செய்து கொண்டாடியபடியால், விஜயதசமி
என்றும் வழங்கலாயிற்று என்று சொல்வது உண்டு.

நவராத்திரியில் ஸ்ரீதேவியைத்(திருமகளைத்) துதித்து
வழிபடுவோர்களுக்கு தேவியானவள் சகல
நல்குவாள் என்பது மட்டுமல்லாமல் வீட்டுப்பேறாகிய
முக்தியையும் நல்குவாள் என்று சொல்லப்படுகின்றது!

நவராத்திரியில் முதல் மூன்று நாளும் இச்சா சக்தியின்
தோற்றமான துர்க்கையின் ஆட்சிக் காலம். இதில்
இறைவன் உலகத்தை வாழ்விக்க விரும்புகின்றான்.

நடுவில் உள்ள மூன்று நாட்களும் ஞானசக்தியின்
தோற்றமான இலக்குமியின் ஆட்சிக்காலம். இதில்
இறைவன் ஆன்மாக்களுக்கு தனு, கரண, புவன
போகங்களைக் கொடுக்கும் முறையை அறிகின்றான்

இறுதி மூன்று நாட்களும் கிரியா சக்தியின் தோற்றமான
இலக்குமியின் ஆட்சிக்காலம். இதில் இறைவன் முன்
அறிந்தவாறு அருள் வழங்குகின்றான் .





 விரதம் அனுஷ்டிப்போர் அமாவாசையில் ஒரு வேளை
உணவு உண்டு பிரதமை தொடக்கம் பகல் உணவின்றி
இரவு பூசை முடிந்தபின் பால் பழம் அல்லது பலகாரம்
உண்பது நல்லது.ஒன்பதாவது நாளாகிய மகாநவமி
அன்று பட்டினியாய் (உபவாசம்) இருந்து மறுநாள்
விஜயதசமியன்று காலை ஒன்பது மணிக்குமுன்
பாரணை செய்தல் வேண்டும். இயலாதவர்கள்
முதல் எட்டுநாளும் பகல் ஒருவேளை உணவருந்தி
ஒன்பதாம் நாள் பால் பழம் மட்டும் உட்கொள்ளலாம்.
விஜயதசமி அன்று காலையில் சுவையுள்ள
உணவுப்பதார்தங்கள் தயார் செய்து சக்திக்கு
நிவேதித்து நவமியில் வைத்துள்ள புத்தகம்
இசைக்கருவிகளைப் பராயணம் செய்து குடும்ப
அங்கத்தவர்களுடன் பாரணையைப் பூர்த்தி செய்யலாம்.

ஆண்கள் தயவு செய்து மன்னிக்கவும்...
உங்களுக்கு வேலை ஜாஸ்தி வந்து விட்டது.
இந்த ஒன்பது நாட்களும் கொஞ்சம் உங்க
வீட்டு கொலுவில் உங்க அம்மணிக்கு பரந்த
மனதுடன் உதவுங்களேன்...ப்ளீஸ்!!!
இனி வரும் ஒன்பது நாட்கள் நவராத்திரி மேலா  தான்..
உங்க நவராத்திரி டிப்ஸ்,மற்றும் சுவையான நிகழ்வுகளை
அடுத்து வரும் பதிவில் பகிர்வோமா? உங்க வீட்டு கொலு
புகை படங்களை எனக்கு அனுப்புங்க..ப்ளோகில் போட்டு
அசத்திடலாம்...வாங்க கை சேர்த்து எண்ணங்களை
பகிர்ந்து அசை போடுவோம்.நவராத்திரி கொண்டாடுவோம்.

எங்களுக்கு கொலு வைக்கும் பழக்கம் கிடையாதுன்னு
எஸ்கேப் ஆக மட்டும் முடியாது..நாலு பொம்மை
வாங்கி இந்த வருடம் கொலுவை இனிதாக கொண்டாட
என் மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோதர சகோதரிகளுக்கு.

சனி, அக்டோபர் 02, 2010

மார்பக புற்றுநோய்


 உலகெங்கும் பெண்களுக்கு ஏற்படும் புற்றுநோய்களில்,
10.4% நிகழ்வுகள் மார்பக புற்றுநோயால் ஏற்படுகிறது,
இது தோல் மேல் ஏற்படாத புற்றுநோயில் இரண்டாவது
இடத்தையும் (நுரையீரல் புற்றுநோய்க்கு அடுத்ததாக)
புற்றுநோயால் ஏற்படும் மரணங்களில் ஐந்தாவது பெரிய
காரணமாகவும் இருக்கிறது 2004ஆம் ஆண்டில்,
உலகெங்கும் 519,000 மரணங்கள் மார்பக புற்றுநோயால்
ஏற்பட்டது (புற்றுநோய் மரணங்களில் 7%; மொத்த
மரணங்களில் 1% ) மார்பக புற்றுநோயானது,
ஆண்களை விட 100 மடங்கு அதிகமாக பெண்களுக்கு
வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

Breast Cancer Awareness Month (BCAM)
also referred to in America as
National Breast Cancer Awareness Month (NBCAM)


மருத்துவ அமைப்புகளில், மார்பக புற்றுநோயானது,
மார்பக பரிசோதனையில் ஒரு "மும்மை சோதனை"
மூலம் கண்டறியப்படுகிறது (பயிற்சி பெற்ற மருத்துவரின்
மார்பக பரிசோதனை), மேம்மோகிராஃபி, மற்றும்
நுண் ஊசி கண்டறிதல் சைட்டோலஜி ஆகியவை ஆகும்.
மேம்மோகிராஃபி மற்றும் கிளினிக்கல் மார்பக சோதனை
ஆகிய இரண்டுமே, ஒரு கட்டி புற்றுநோய்தானா என்று அறியவும்,
சில நேரங்களில் பிற காயங்கள் ஏதும் உள்ளனவா என்று அறியவும் கூட பயன்படுத்தப்படுகின்றன. நுண் ஊசி கண்டறிதல் மற்றும்
சைட்டோலஜி (FNAC)
, என்ற சோதனையை, GP இன்
அலுவலகத்தில், மரத்துப்போகும் பொருளைப் பயன்படுத்தி,
கட்டியிலிருந்து திரவத்தை எடுக்க முயற்சி செய்வதாகும்.
தெளிவான திரவமானது, கட்டி புற்றுநோயாக இல்லை என்று
தெரிவிக்கும், ரத்தத்துடன் கூடிய திரவமானது புற்றுநோய்
செல்கள் உள்ளனவா என்று நுண் பெருக்கி கண்ணாடி
(மைக்ரோஸ்கோப்) பரிசோதனைக்கு அனுப்பப்படும்.
இந்த மூன்று சோதனைகளையும் ஒன்றிணைத்து,
மார்பக புற்றுநோயை மிக அதிக துல்லியத்துடன்
கண்டறிய பயன்படுத்தலாம் !




மார்பக புற்றுநோயானது முதலில், அறுவைசிகிச்சை
மூலமாகவும் பின்னர் மருந்துகள், கதிரியக்கம்
அல்லது இரண்டினாலும் சிகிச்சையளிக்கப்படுகிறது.
கண்டறிதல் மற்றும் மீண்டும் வருவதற்கான வாய்ப்பு
ஆகியவற்றின் அடிப்படையில் சிகிச்சைகள் அதிக
தீவிரத்துடன் தரப்படுகின்றன. நல்ல முன் கண்டறிதலுடன்
கூடிய ஆரம்பநிலை கான்சர்கள் (DCIS அல்லது நிலை 1
அல்லது நிலை 2) லம்பெக்டோமி மற்றும் கதிரியக்கம்
ஆகியவை மூலம் மட்டுமே சிகிச்சையளிக்கப்படுகின்றன
மிகவும் குறைவாக கண்டறியப்பட்ட மற்றும் மீண்டும்
வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் கொண்ட பிந்தைய நிலை
கான்சர்கள் அதிதீவிர கீமோதெரபி
மூலமாக சிகிச்சையளிக்கப்படுகின்றன



மார்பக புற்றுநோயை கண்டறியக்கூடிய முதல் அறிகுறியானது
மார்பகத்தின் திரட்சியானது பிறத் திசுக்களிலிருந்து வேறுப்பட்டதாக
இருப்பதை அறிவதாகும். ஒரு பெண் கட்டியை உணர்ந்தவுடனே
80% மார்பக புற்றுநோய்கள் கண்டறியப்பட்டு விடுகின்றன.
மார்பகத்தின் திரட்சி கண்ணுக்கு புலனாகும்
அளவுக்கு மாறும்போது,
அது பல ஆண்டுகளாக வளர்ந்து வந்திருக்கும் நிலையே ஆகும்.
ஆரம்பநிலை மார்பக புற்றுநோய்கள் முலை ஊடுகதிர்ப்பட
சோதனை (மேமோகிராம்) மூலமாக அறியப்படுகின்றன.

மார்பக புற்றுநோயின் பிற அறிகுறிகளாவன, மார்பக அளவு,
வடிவம் ஆகியவற்றில் மாற்றம், தோலில் பருக்கள் தோன்றுதல்,
மார்பு காம்பு திரும்புதல் அல்லது ஏதேனும் ஒரு காம்பிலிருந்து
தானாகவே நீர்வடிதல். மார்பக புற்றுநோய் இருக்கிறதா அல்லது
இல்லையா என்று தீர்மானிப்பதில்,
வலியானது ("மாஸ்டோடைனியா")
ஒரு நம்பகமற்ற கருவியாகும், டெர்மல் லிம்பாடிக்ஸ் எனப்படும்
மார்பக தோல்பகுதியில் உள்ள சிறிய நிணநீர் பைகளை மார்பக
புற்றுநோய் செல்கள் தாக்கும்போது, அதனுடைய வெளிப்பாடானது
தோல் வீக்கத்தை ஏற்படுத்தக்கூடும், எனவே இது வீக்கமுடைய
மார்பக புற்றுநோய் ( inflammatory breast cancer- IBC)
என்றழைக்கப்படுகிறது.

மார்பகப் புற்றுநோயின் அறிகுறி என்று குறிப்பிடப்படும் மற்றொன்று
மார்பகத்தில் பேஜட் குறைபாடு (Paget's disease of the breast)
ஏற்படுவதாகும். இந்த அறிகுறியானது எக்சிமாடாய்ட் தோல்
மாற்றங்களால் வெளிப்படும். அதாவது மார்பு காம்பின் தோலானது
சிவந்தும், சிறிதளவு உறிந்து வருமாறும் மாறும். பேஜட்
தீவிரமடையும்போது, எரிச்சல், அரிப்பு, அதிகமான உணர்திறன்
மற்றும் வலி ஆகியவைக் காணப்படும்.

சில நேரங்களில், மார்பக புற்றுநோய், மெட்டாஸ்டாடிக்
(மாற்றிடமேறிய) குறைபாடாக இருக்கும், அதாவது புற்று
ஏற்பட்ட இடத்திலிருந்து பிற இடங்களுக்கு பரவக்கூடும்.
மெட்டாஸ்டாடிக் மார்பக புற்றுநோயானது மெட்டாஸ்டாடிஸின்
இருப்பிடத்தைப் பொறுத்து அறிகுறிகளை ஏற்படுத்தக் கூடும்.
மெட்டாஸ்டாடிஸ் உருவாகக் கூடிய பொதுவான
இடங்களாவன: எலும்பு, கல்லீரல், நுரையீரல் மற்றும் மூளை
ஆகியவையாகும் காரணமற்ற எடையிழப்பும் கூட, சில நேரங்களில்
மார்பக புற்றுநோயின் புதிரான அறிகுறியாக கொள்ளப்படலாம்.
அதனால் அணைத்து பெண்களும் குறிப்பாக நாற்பது வயதை தொட்டவர்கள்
மருத்தவரிடம் தகுந்த அல்லோசனை பெற்று
செக் பண்ணி மார்பக புற்று நோயை
அறவே ஒழித்து விழிப்பு உனர்வை ஏற்படுத்துவோம் !!!