உலகத்தை புரிந்து கொண்டேன் !
என் வீடு அருகில் ஒரு பாட்டி 92 , வயது ஆகிறது.
5 , மகன்கள் உள்ளனர் . மகள் இல்லை . மூன்று மகன்கள்
இறந்து விட்டனர். பேரன் பேத்திகள் ,கொள்ளு பேரன் பேத்திகள்
இருகின்றனர். இறந்து போன ஒரு மகனின் மனைவி பாட்டி வீட்டு
பக்கத்தில் தான் இருக்கிறார். ஆனாலும் பாட்டி தனியாக சமையல்
செய்து சாப்பிடுகிறார், அனைவரும் பணம் கொடுத்து விடுகின்றனர் .
ஆனால் அருகில் ஒருவரும் இல்லை. வயது அதிகம் ஆவதால் தற்சமயம்
சமைத்து சாப்பிட முடிய வில்லை. இடுப்பு எலும்பு முறிந்து அறுவை
சிகிச்சை செய்து இப்பொது நன்றாக இருக்கிறார். இருபினும் தன் கூட
ஒருவரும் இல்லையே என்று அடிக்கடி கூறுகிறார்.எங்கள் வீட்டுக்கு மட்டும்
வந்து சிறிது நேரம் பேசிக்கொண்டு இருப்பார். தனிமை அவரை மிகவும்
பாதித்துள்ளது.வயது ஆவதால் முடியவில்லை அவரால்.பாவம்!
சமீபத்தில் அவர்கள் இல்ல விழாவுக்கு அனைவரும் பாட்டி வீட்டில் கூடினர்.
அவருக்கு சாப்பாடு இனிமேல் மெஸ்ஸில் ஏற்பாடு செய்து விடூவோம் ,
என்று முடிவு செய்து , என் முன்னிலையில், பாடடி இடம் பேசினார்கள்.
பாட்டி எனக்கு சாப்பாடு பிரச்சனை இல்லை ,, என் கூட யாராவது
இருந்தால் போதும் என்றார். ஒருவரும் முன் வரவில்லை. அவர்கள் சொன்னது :
முதல் மருமகள் : மெஸ்சில் பணம் கொடுத்து சாப்பிடட்டும், நமக்கு இவர்கள்
சகவாசம் வேண்டாம், ,என் புருஷன் உயிருடன் இருந்த போது தான் இந்த
கிழவி நிம்மதியா என்னை வாழவிடலை, தினம் எங்களுக்குள் சண்டை மூட்டி
விடும் . இனியாவது நான் என் வழியில் செல்கிறேன், என்னை விடுங்கள் என்றார்.
இரண்டாவது மருமகள் நாங்கள் பணம் மெஸ்ஸில் செலுத்தி விடுகிறோம்
எங்களை ஆளை விடுங்கள், இளைய மகனுக்கு தான் எல்லா நகையும்
தந்தார்கள், அவர்களே கவனித்து கொள்ளட்டும்., நாங்கள் தொலைவில்
இருககிறோம் அடிகடி வர முடியாது .ஒரு வழி பாட்டிக்குசெய்கிறோம் என்றார்.
மூன்றாவது மருமகள் இவருடைய டார்ச்சர் தாங்காமல் புருஷனை விட்டு
சென்று விட்டாராம் . நான்காவது மருமகள் .என் பிள்ளைகளை ,குழந்தைகள்
காப்பகத்தில் அன்று விட சொன்னார்கள் ., இன்று இவங்களை முதியோர்
இல்லத்துக்கு அனுப்புங்கள் .என்று கூறி விட்டு தனக்கும் இந்த பிரச்சனைக்கும
சமந்தமே இல்லை என்பது போல் உட்கார்ந்து இருந்தார் ஒரு ஓரமாக.....
கடைசி மருமகள் கூறியது: இதோ பாருங்க , எல்லாருக்கும் வீடு இருக்கு .
எங்களுக்கு மட்டும் இல்லை , அதனால் பாட்டி இருக்கிற வீட்டு பத்திரத்தை
கொடுங்க நாங்க பிழைச்சுகிற... பிறகு பாக்கலாம் பாட்டி விசயத்தை. என்றார்.
பாட்டி எனக்கு யாரும் வேண்டாம் என்று தலையில் அடித்துக்கொண்டு போனார்.
யாரை நொந்து கொள்ள ..என்ன சொல்ல.. அமைதியாக சென்று விட்டனர்.