தஞ்சாவூர் என்றாலே தலை ஆட்டும் பொம்மை,
ஞாபகம் வரும் !.அது போல் இந்த அசோகா அல்வா
ரொம்ப பாபுலர்.என் அப்பா தஞ்சையில் DSP , ஆக
வேலை செய்த போது , அடிக்கடி இந்த அசோகா
வாங்கி தருவார்கள். !என் அக்கா பிள்ளைகள்
தஞ்சாவூரில் என்ன ஸ்பெஷல் என்று கேட்பார்கள்.
நான் தலை ஆட்டி பொம்மை, அசோகா தான் ஸ்பெஷல்
என்பேன். தலை ஆட்டி பொம்மை போல் நான் ஆடும்
வரை எங்கள் பொடிசுகள் என்னை விடாது . பிறகு அசோகனா ?
அசோகா சக்ரம் நம் நாட்டு கொடியில் இருக்குமே / அதை
யாராவது சாப்பிடுவார்கள? என்று நக்கல் வேறு ..பன்னுவார்கள்!!!
ஒரு தடவை டேஸ்ட் செய்தால் போதும்.
பிறகு அசோகாவை விட மாடீர்கள்......
தேவையானவை
பாசி பருப்பு : 1 கப்
கோதுமை மாவு : 1 கப்
மைதா ; 1 /2 கப்
சர்க்கரை : 4 கப்
நெய் : 1 கப்
ஏலக்காய் தூள் : 2 ஸ்பூன்
கேசரி பவ்டர் : 1 சிட்டிகை
முந்திரி : 20 ,
ஜாதிக்காய் : சிறிது
குங்கும பூ : சிறிது
செய்முறை
பாசி பருப்பை வாசம் வரும் வரை வறுத்து குக்கர்ரில் போட்டு
வேக வைத்து (3 விசில்) குழைய மசித்து தண்ணீர் இல்லாமல்
வடித்து வைத்து கொள்ளவும். மைதா,கோதுமை மாவை கலந்து
இரண்டு ஸ்பூன் நெய் விட்டு வாசம் வரும் வரை ரோஸ்ட் ஆக
வறுத்து கொள்ளவும்,ஆறிய உடன் இதை ஒரு கப் தன்நீர்ரில் சிறிது
கேசரி கலர் சேர்த்து நன்றாக கட்டி இல்லாமல் கரைத்து கொள்ளவும்.
அடி கனமான பாத்திரத்தில் கொஞ்சம் நெய் விட்டு முந்திரி வருத்து
அதில் வேகவைத்த பருப்பு ,சக்கரை சேர்த்து நன்றாக கிளறவும் !
சர்க்கரை உருகி திரண்டு வரும் போது ஸிம்மில் வைத்து கொண்டு
இப்ப மெதுவாக கரைத்து வைத்து உள்ள மைதா,கோதுமை மாவு
கரைசலை கொஞ்சம் கொஞ்சமாக விட்டு கிளறவும்.கட்டி இல்லாமல்
நன்றாக கிளறி கொண்டு இருக்கவும்.தண்ணீர் இல்லாமல் கெட்டியாக
வரும் வரை அடுப்பை சிறு தீயில் வைத்து நெய் முழுவதயும் சேர்த்து
கிளறி நெய் பிரிந்து வரும் போது அடுப்பை நிறுத்தி ஜாதிக்காய், பாலில்
கரைத்த குங்குமபூ ,ஏலக்காய், வறுத்த திராட்சை தூவி இறக்கவும்.
சூப்பர் அசோகா அல்வா ரெடி! விசேசங்களுக்கு ஏற்ற ஸ்வீட் !
செய்து பார்த்து சுவைத்து பின்பு உங்கள் கருத்துகளை கூறுங்கள்
௦