சனி, ஏப்ரல் 23, 2011

இவர்கள் ஏன் வருகிறார்கள்!!

என் நெருங்கிய தோழி வீட்டிற்கு சென்று 
இருந்தேன்...மறு நாள் அவர்கள் வீட்டில் 
உள்ளவர்கள் பரபரப்புடன்கானப்பட்டநேர் ...
போன் மூலம்  தோழியின் நாத்தனார்அங்கு 
வருவதால் தான் பரபரப்புக்கு காரணம் ..என்று 
தெரிந்து கொண்டேன்...யார் முகத்திலும் அங்கு 
மகிழ்ச்சி இல்லை...அங்கும் இங்கும் ஓடி கொண்டு
இருந்தநேர்.சுனாமி வருது.என்று என் தோழி 
மற்றொரு தோழி இடம் போனில் சொல்வது 
கேட்டு.. ஒரு நிமிடம அதிர்ந்தேன்.!!

ஸ்நாக்ஸ் டப்பாக்களை பீ ரோவில் பூட்டி 
வைத்தார்கள் !!பழங்களை பிரிட்ஜ் கீழ் 
பகுதியில் மறைத்து வைதநேர்.
ஸ்டோர் ரூம் திங்க்ஸ் பீரோகுள் 
கண்ணனுக்கு தெரியாத வண்ணம் 
மறைத்து வைக்கப்பட்டன !வீட்டு சாமான்கள் 
ஷிப்ட் ஆகியது!!!ஒரே வியப்பாக இருந்தது எனக்கு!!!

அது வரை அமைதியாக இருந்த என் தோழி....மிகுந்த 
படபடப்புடன் காணப்பட்டாள்..நான் கிளம்பும் முன் 
தயங்கி.தயங்கி..ஒரு வழியாக விசயத்தை சொன்னாள்..

என் நாத்தனார் வந்தால் ...போவதற்குள் ஒரு வழி பண்ணி 
சென்று விடுவாள்..வீட்டில் ஒரு சாமான் இருக்காது !.
சாப்பிடும் பொருள் அனைத்தையும் ,பத்திர படுத்த  வேண்டும்.


வாரி வழித்து.பாத்திரத்தை கவிழ்த்தி துடைத்து விடுவாளாம்.
சமையல் காஸ் முதல் ...மளிகை சாமான் மற்றும் அணைத்து 
பொருள்களையும் தீர்த்து ,மறுபடியும் வாங்கும்படி ஆகிவிடும்.
இதில் அம்மாவிடம் புகார் வேறு.! சரியா கவனிக்கலே.. என்று...
போதா குறைக்கு இவள் மாமியார் அடுத்த பஸ்சில் ஏறி வந்து 
அவர் பங்குக்கு கொஞ்சம் கூட யோசிக்காமல் ..செலவு களை
ஏற்றி கொண்டு செல்வாராம்.இவர்கள் என்ன செய்வது என்று 
தெரியாமல் கண்ணு முழி பிதுங்கி..,, அவர்களை சமாளித்து 
அனுப்புவதேற்குள் போதும் என்று ஆகி விடும் என்று கூறினாள்!

போன தடவை இது போல் தான்  நாத்தனார் வந்த போது.... 
ஹாட்  பாக்கில் இட்லி வார்த்து வைத்து விட்டு, மறு 
நாள் குழந்தைகளுக்கு இட்லி உப்புமா லஞ்சுக்கு   கொடுக்க 
பிளான் பண்ணி சற்று லேட் ஆக எழுந்து சட்டியை அடுப்பில் 
போட்டு இட்லியை தேடினால் ...ஹாட்  பாக்..காலி.!!!!
ஒரு இட்லி கூட வைக்காமல் அத்தனையும் அபேஸ் .....
அட்லீஸ்ட் எடுத்ததை முன் கூட்டியே  சொல்லலாம்.
அல்லது மாவு எடுத்து தனக்கு வேண்டியதை செய்யலாம்.

இந்த பெண்கள் கொஞ்சமாவது யோசிக்க மாட்டார்களா?
இவர்கள் உதவி செய்யாவிட்டாலும் உபத்திரம் செய்யாமல் 
இருக்கலாம் அல்லவா?  என்று என் தோழி புலம்பினாள்..

ஆக இவர்கள் ஏன் வருகிறார்கள் என்று நினைக்க வைக்கிறது 
இவர்களின் செயல்.என்று கூறி பெருமூச்சு விட்டாள்,தோழி.

22 கருத்துகள் :

  1. ஒருவேளை இவர்களும் இயல்பாக இருந்தால்
    அவர்களும் அப்படி இருப்பார்களோ
    அல்லது
    அவர்கள் வீட்டில் அவர்கள் இயல்பாக
    இருப்பதுபோல் இங்கும் இருப்பதால்
    ஒருவேளை தவறாகத் தெரிகிறதோ
    சரியாகப் புரியவில்லை
    ஆனாலும்
    இப்படி சங்கடப்படுவதோ அல்லது
    இப்படி சங்கடப்படுத்துவதோ
    சரியான உறவுகளாகப் படவில்லை
    யோசிக்க வைத்த நல்ல பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. இதை பற்றி நிறைய எழுத இருக்கிறது .நல்ல பகிர்வு
    ஈஸ்டர் விடுமுறைக்கு பின் சந்திப்போம்.

    பதிலளிநீக்கு
  3. வாங்க ! நிறைய எழுதுங்கள் angelin .

    பதிலளிநீக்கு
  4. Ramani சார் , நீங்க சொல்றது போல் ..
    உறவுகள் இயல்பாக இருந்தால்
    நன்றாக இருஇக்கும்.

    பதிலளிநீக்கு
  5. உண்மைதான்.. சிலர் வருவது கலவரமாகி விடுகிறது.. உறவைப் பேண மறந்து போவதால் வரும் தொல்லை இது..

    பதிலளிநீக்கு
  6. எடுப்பது தவறென்றால் ஒளிப்பதும் தவறுதானே. கணவரின் சகோதரிதானே, அவர்கள் எடுக்கும் முன் தந்துவிட்டால் நல்ல பெயர் கிட்டும். திரும்ப அத்தனையையும் சரி செய்வது கணவரின் பொறுப்பு. இதெல்லாம் சந்தித்துதானே ஆக வேண்டும்.

    பதிலளிநீக்கு
  7. சாகம்பரி மேடம் ,
    எடுப்பது தவறென்றால் ஒளிப்பதும் தவறுதானே" மிக சரி.

    பதிலளிநீக்கு
  8. ரிஷபன் என்று தான் உறவுகள்
    மேம்படும் ?

    பதிலளிநீக்கு
  9. ///
    இந்த பெண்கள் கொஞ்சமாவது யோசிக்க மாட்டார்களா?
    இவர்கள் உதவி செய்யாவிட்டாலும் உபத்திரம் செய்யாமல்
    இருக்கலாம் அல்லவா? என்று என் தோழி புலம்பினாள்..////

    என்ன செய்ய சிலர் இன்னும் இப்படித்தான் இருக்கிறார்கள்..

    பதிலளிநீக்கு
  10. நீங்க ஏதோ தப்பா நினச்சுகிட்டீங்கன்னு நினைக்கிறேன்.. நானும் ரமணி ஐயாவின் கருத்தை வழிமொழிகிறேன்..

    இவ்வாறு இருப்பது அவர்களது இயல்பாக இருக்ககூடும்.. நம்ம வீடு தானே யார் என்ன நினைப்பார்கள் என்னும் நோக்கில் அவர்கள் அப்படி செய்திருப்பார்கள்.. கொஞ்சம் வெகுளியாகவும் இருந்திருக்கலாம்.. அப்படி நான் சொல்வது போல இருந்தால் நீங்களெல்லாம் இப்படி நினைப்பது அவருக்கு தெரிய நேர்ந்தால் அவர் மனம் என்ன பாடு படும்..

    பதிலளிநீக்கு
  11. தம்பி கூர்மதியன் வாங்க!
    "நீங்களெல்லாம் இப்படி நினைப்பது அவருக்கு தெரிய நேர்ந்தால் அவர் மனம் என்ன பாடு படும்."
    ஆம் .மனசு கஷ்டப்படும் .
    என்ன செய்வது?

    பதிலளிநீக்கு
  12. கவிதை வீதி சௌந்தர் வாங்க!நன்றி .

    பதிலளிநீக்கு
  13. இராஜராஜேஸ்வரி வாங்க!நன்றி .

    பதிலளிநீக்கு
  14. சாப்பிடும் சாமான்களை மறுபடி வாங்கிக் கொள்ளலாம். அவர்கள் கொட்டும் வார்ததைகளை???

    பதிலளிநீக்கு
  15. middleclassmadhavi
    கொட்டும் வார்ததைகளை??
    என்றும் ஆறாத வடு !

    பதிலளிநீக்கு
  16. சிலர் இப்படி(யும்) இருக்கிறார்கள். எனினும், இருபுறத்திலும் உறவு மேம்படுத்தப்படவேண்டியது போல் தெரிகிறத்.

    பதிலளிநீக்கு
  17. I am verymuch apset with the young generation relationship dear.
    viji

    பதிலளிநீக்கு

welcome