சனி, ஜூன் 25, 2011

குறை ஒன்றும் இல்லை

அன்று  புவனாவுக்கு வீட்டில் இருந்து போன்
என்று ஆபிஸ் ரூமில் இருந்து அழைப்பு வந்தது.!
லஞ்ச் டைம் என்பத்கால் ...ஒருவருக்கு ஒருவர் பேசிக்கொண்டு  
அனைவரும் சாப்பிட்டு  கொண்டு இருந்தனர் !. புவனா கையை  கழுவி 
விட்டு,துடைத்து கொண்டு கிளம்பினார்.

உடனே ஆபிஸ் பியூன் உங்களுக்கு இல்லை 
போன் ...அந்த பெரிய மனுசி ஆகாத புவனாவுக்கு ..
என்றாரே பார்க்கலாம்.! அனைவரும் ஒரு நிமிஷம் 
அமைதி காத்தோம்.!! மற்றொரு புவனா சத்தம்இல்லாமல் 
கை கழுவி கொண்டு ஆபிஸ் ரூம் 
விரைந்தார்.! அன்று அனைவர்க்கும் புவனா 
பெரிய மனுசி ஆகாத விவரம் தெரிந்து விட


போன் பேசி விட்டு வந்த புவனா தலை குனிந்து அவரது
இருக்கையில் அமர்ந்தார்.என் தோழி 
சூழ்நிலையை மாற்ற ..புவனாவிடம் சென்று 

யார் போனில் ? என்று கேட்க .கண்ணீர் தழும்ப..அப்பாவிடம்
இருந்து என்று.. விருட் என்று ஒற்றை வரியில்  சொல்லி 

கிளம்பி வெளியே சென்று விட்டார்.பிறகு 
ஒரு வாரம் ஆபிஸ் பக்கம் ஆளை காணவில்லை .


பெறகு உடம்புக்கு சரி இல்லை என்று லீவ் சொல்லி ஒரு வாரம் 
கழித்து  டுட்டி ஜாயின்  பன்ணினார்..

 ஆபிஸ் பியூன் சொல்லிய ஒரு வார்த்தையால் ...
இன்று புவனாவின் இயல்பு நிலையே மாறியது!
அவர் பெரிய மனுசி ஆகாதது ஒரு தவறா? 
அதை காரணம் காட்டி எப்படி அவ்வாறு சொல்லாம்?
அது அவரின் தனிப்பட்ட விஷயம்.!இயற்கை 
செய்யும் விளைவுகளுக்கு .. என்ன செய்வது?
இவர்கள் எல்லாம் திருந்தவே மாட்டார்களா?

இவர்கள் வீட்டு பெண்களுக்கு இப்படி ஒரு 
நிலை  ஏற்பட்டால் ..இப்படி தான் பொது இடங்களில் 
போட்டு உடைப்பார்களா?  தெரியாமல் தான் 

இப்படி நடந்து கொள்கிறார்களா? என்று 

புரியவில்லை !! தங்களுக்கு ஒரு வேளை 

இதுபோல் ஏற்பட்டால் தான் ..இவர்களுக்கு 

வலி என்ன என்பது புரியுமா?  என்று 

தெரியவவில்லை. மிகவும் வருத்தமாக இருந்தது.


அது போல நிறைய இடங்களில் நான் பார்த்து 

உள்ளேன்!அடையாளம் காட்ட , அவர்களின் 

குறையை ஏன் சுட்டி காட்டு கிறார்கள் என்று 

தெரிய வில்லை.அதில் அப்படி என்ன ஆனந்தம் என்று 

தான் புரிய வில்லை. அழகாக அவர்கள் 

இனிசியல் சொல்லி வேறு படுத்தலாம்.அல்லது 

அவர்கள் ஊர் பேரை சொல்லி அடையாளம் 

காட்டலாம்.அதை எல்லாம் விட்டு விட்டு.....

குள்ளமா ,கருப்பாய் , பல்லு எடுப்பாய் .....

சப்பாணி , கண்ணாடி ,ஒன்றரை  கண்ணு 

என்று எகத்தாளமாக பேசுபவர்களை என்ன செய்வது?

பெண்கள் என்றால் கேவலாமா?

இவர்கள் எல்லாம்  பெர்பெக்டாக உள்ளவர்களா?

சுட்டி காட்டுவதற்கு முன்பு ..நாம் எப்படி இறிக்கிறோம் !! 

என்று  அவர்கள்  தங்களை பார்த்து கொண்டால் போதும்!!! 

இது போன்ற  நையாண்டி தனம் வரவே வராது !..

பப்ளிக் இடங்களில் எப்படி பேச வேண்டும் என்று

இவர்களுக்கு எஜுக்கேட்  பண்ண வேண்டியது 

இன்றி அமையாத ஒன்றாகும்!!


இங்கு clck    பண்ணி படிங்க..!! அழகா சொல்லி இருக்கு!







10 கருத்துகள் :

  1. ரொம்ப சோகமான செய்திதான் சகோதரி
    இது பெண்களுக்கு மட்டும் அல்ல ஆண்களுக்கும் நடக்கிறது
    ஆனால் ஆண்களை விட பெண்களுக்குத்தான் பாதிப்பு அதிகம்
    இது மாதிரியான செயல்களை யாராக இருந்தாலும் நிறுத்திக் கொள்ளுவது நலம் , நல்ல பகிர்வு

    பதிலளிநீக்கு
  2. மிகவும் வருந்தத்தக்க செய்தியே.
    பொது இடங்களில் பிறர் மனம் புண் படாதவாறு மிகவும் நாகரீகமாக நடந்து கொள்ள வேண்டும் என்பதை அனைவருமே உணர்ந்தால் தான் நல்லது.

    நல்லதொரு பதிவு. இதைப்படிப் போராவது தாங்களும் திருந்தட்டும். பிறரையும் திருத்தட்டும்.

    பதிலளிநீக்கு
  3. வாங்க ஐயா வணக்கம்!
    தங்கள் கருத்துக்கு நன்றி .

    பதிலளிநீக்கு
  4. A.R.ராஜகோபாலன் வாங்க சகோதரரே ! ஆண்களுக்குமா?ஆச்சரியமா இருக்கு போங்க !

    பதிலளிநீக்கு
  5. ஹூம்.. நம்மாளூங்களூக்கு மேனர்சும் தெரியாது. டீசன்சியும் பத்தாது

    பதிலளிநீக்கு
  6. நன்றி சி.பி.செந்தில்குமார் sir!

    பதிலளிநீக்கு
  7. சரியாகச் சொன்னீர்கள்.

    குழந்த்தைகளிடம் உருவு கண்டு எள்ளாமை வேண்டும் என்று சொல்லி வளர்க்க வேண்டும். (நான் அப்படித் தான் செய்கிறேன்) வரும் தலைமுறையாவது நன்றாக இருக்கட்டும்

    பதிலளிநீக்கு
  8. அந்தப் பியூனை யாருமே கண்டிக்கலையா? அப்படி செய்யாமல் இருப்பதுதான், இவ்வாறு பேசுவது தவறில்லை என்ற மனோபாவம் வந்துவிடுகிறது.

    பதிலளிநீக்கு
  9. middleclassmadhavi வாங்க
    தங்கள் கருத்துக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  10. ஹுஸைனம்மா வாங்க ,
    நீங்க சொன்ன மாதிரி பியூனை யாருமே
    கண்டிக்காதது தான் இப்படி எல்லாம் நடக்குது.நன்றி!

    பதிலளிநீக்கு

welcome