திங்கள், டிசம்பர் 06, 2010

தலை முடி கொட்டுதா ?

source click

தலை முடி உதிர்வதைத் தடுக்க வேண்டுமா

இன்றைய காலத்தில் சுத்தமான நீர் இல்லாததாலும், இயற்கை முறையில் தலைக்குக் குளிக்காமல், இரசாயனக் கலப்பு நிறைந்த ஷாம்பு, சோப்பு போன்றவற்றால் குளிப்பதாலு‌ம் இளம் வயதிலேயே தலை முடி கொட்டி விடுகிறது.
முடி என்னமோ எளிதாகக் கொட்டிவிடுகிறது. ஆனால், அதனை மீண்டும் முளைக்க வைக்கவோ, மேலும் முடி கொட்டாமல் காப்பாற்றுவதோ இன்றைய மருத்துவத்தில் பெரும் சவாலாக உள்ளது.
இ‌ந்‌நிலை‌யி‌ல், முடி உதிர்வதைத் தடுக்கவும், இள நரையை தவிர்ப்பதும் எப்படி என்பது குறித்து இயற்கை மருத்துவம் என்ன சொல்கிறது என்று பார்ப்போம்.

வேப்பிலை ஒரு கையளவு எடுத்து அதனை தண்ணீர் போட்டு கொதிக்க வைத்துவிட்டு மறுநாள் அந்தச் சாறு எடுத்து தலையைக் கழுவிக் கொள்ள வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்தால் முடி உதிர்வதைத் தடுக்கலாம்.
வெந்தயம், குன்றிமணியை பொடி செய்து, அதனை தேங்காய் எண்ணெயில் ஒரு வாரம் ஊற வைக்க வேண்டும். பிறகு தினமும் அதனை காலையில் தலையில் தேய்த்து வந்தாலும் முடி உதிர்வதைத் தடுக்கலாம்.

சிலருக்கு சிறு வயதிலேயே இளநரை தோன்றும். இவர்கள் செய்ய வேண்டியதெல்லாம் நெல்லிக்காயை தொடர்ந்து சாப்பிட்டு வந்தாலே 
போதும் இளநரை மாயமாகிவிடும்.



சிலருக்கு முழுவதும் நரையாகிவிடும். இவர்கள் செய்ய வேண்டியது என்னவென்றால், தாமரைப் பூ கஷாயம் வைத்து தொடர்ந்து காலை, மாலை என குடித்து வரவேண்டும். முளைக்கீரையை வாரம் ஒரு முறை சாப்பிட்டு வந்தால் நரை படிப்படியாகக் குறையும்.

சரி, முடி உதிர்வதைப் பார்த்தோம், நரை போக்க வழி பார்த்தோம். முடி வளர வழி இருக்கிறதா? ஆம் அதுவும் இருக்கிறது நம் இயற்கை மருத்துவத்தில்.
கறிவேப்பிலையை நன்கு அரைத்து தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தலையில் தேய்த்து வந்தால் முடி வளரும்.
இல்லையென்றால், காரட், எலுமிச்சம் பழச்சாறு கலந்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி தலையில் தேய்த்து வந்தாலும் முடி வளரும்.


இவையனைத்திற்கும் மேலாக, சுத்தமாக முடி இல்லாமல் வழுக்கையாக இருப்பவர்களுக்கு ஒரு குறிப்பு.
கீழாநெல்லி வேரை எடுத்து சுத்தம் செய்து அதனை துண்டுகளாக்கி தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி அதனை தலையில் தொடர்ந்து தலையில் தடவி வந்தால் வழுக்கை மறையும்.
தேங்க்ஸ்  z9tech .com  

15 கருத்துகள் :

  1. எல்லோருக்கும் பயனுள்ள பதிவு.

    எவ்வள்வு தண்ணீரில் கொதிக்க வைகக்னும்.

    பதிலளிநீக்கு
  2. டெம்ப்லேட் டிசைன் அருமை, முன்பெல்லாம் கம்ண்ட்டே போடமுடியாது, ஏரர் வரும். இப்ப பரவாயில்லை,

    பதிலளிநீக்கு
  3. நன்றி! தண்ணீர் முடிக்கு அளவாக போதும்.இன்று அணைத்து தரப்பினர்கும் இந்த பிரச்சனை உள்ளது .

    பதிலளிநீக்கு
  4. மிக நல்ல பதிவு..பயனுள்ள தகவல்...

    பதிலளிநீக்கு
  5. எல்லாமே சரிதான் ஆனா இதெயெல்லாம் தின்னா , தேச்சா எத்தனை நாளைல , வாரத்துல வளரும் , வரும் சொல்லலியே..!! எல்லாம் ஒரு சந்தேகம்தான் ஹா..ஹா..!! :-)

    பதிலளிநீக்கு
  6. சாரிங்க ,அடுத்த டவுட்டு, தலைப்புல மெனோபாஸ் பெண்களுக்கு மட்டுமுன்னு போட்டுட்டீங்க .அப்போ இது ஆண்களுக்கு இல்லையா..!! அவ்வ்வ்வ்வ் ((ஏங்க ,ஆண்களை பார்த்தா பாவமா இல்லையா ))

    பதிலளிநீக்கு
  7. நம்ம ஜலீலா அக்கா ப்ளோக்ல நீங்க இப்படி சொன்னீங்க.. இது பெண்களுக்கான பதிவு...மீ எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.. னு பார்த்த ஞாபகம் !
    அதனால் தான் பெண்களுக்கு மட்டுமுன்னு சொன்னேன்.இதுக்கு போய் கோவிச்சுகலாமா
    ராசா? நீங்க அடுத்த டவுட்டு கேட்க ரெடி ஆக
    இருங்க சாமி!!ஹா..ஹா.



    அச்சசோ !!பாவம்க ஆண்கள்!!

    பதிலளிநீக்கு
  8. ஜெய்லானி நம்பிகையுடன் சாப்பிடுங்க
    முடி வளருகிற வரை ...

    பதிலளிநீக்கு
  9. ஹரிஸ் நன்றி ..மீண்டும் வருக !

    பதிலளிநீக்கு
  10. பகிர்வுக்கு நன்றி.டெம்ப்லேட் அழகு.

    பதிலளிநீக்கு

welcome