செவ்வாய், நவம்பர் 16, 2010

நாளை நான் ....

நாளை நான் ?



துள்ளி துள்ளி மான் போல் ஓடினேன் !
ஆசை ஆசையாய் என்னை  அழைத்து ,
எனக்கு பசியை போக்கினாய்...உச்சி 
முகர்ந்து என்னை உன் தோள் மீது போட்டு 
கொண்டு லாலி பாடினாய் ..ஒரு கணம்
சிந்தித்தேன்... மனிதர்கள் எவ்வளவு 
பாசமானவர்கள் என்று..எண்ணினேன் !

நாளை நான் ....?


தேங்க்ஸ்-கூகுள் images
 என்னை கட்டி வைக்கும் பொழுதாவது   எனக்கு 
தெரிந்து இருக்க வேண்டும் ..நாளை .நான்
உங்கள் பசி தீர்க்க போகும் பலிகடா ஆக 
போகிறேன் என்பதை அறியாமல் ,தெரியாமல் ...
உணராமல்....மௌனமாய் நிற்கிறேன்..அழுகிறேன்!

4 கருத்துகள் :

  1. நாளை இல்லாவிட்டால் நாளை மறுநாள் ..
    நாளை மறு நாள் தப்பினால் எப்படியும் இந்த ஞாயிறுக்கு ....
    சாப்பிடுபவரின் மதம் வேண்டுமானால் மாறியிருக்கலாம்..
    பாவம் அது பலி கடா...

    பதிலளிநீக்கு

welcome