புதன், ஏப்ரல் 21, 2010

தர்மம்

சிந்திபோம் !

இன்றைய அவசர உலகத்தில் , விலைவாசி ஏற்றத்தில் , தர்மம் பற்றி 

சிந்திக்க தான் எது நேரம் நமக்கு. ?. ஆடம்பரமான எந்திரமான வாழ்கையில் 

தர்மம் பற்றி பேச மற்றும் நினைக்க நேரமும் மனமும் இடம் தரவில்லை.

மனித நேயம் பற்றி எப்படி தான் நினைக்க முடியும்.? 

சரி .. இதற்கு தீர்வு? .. நமது அன்றாட பணிசுமையில், ஒரு சில நிமிடம் 

நினைத்து நேரம் செலவிட்டாலே போதும்... மனித நேயம் நிலைத்து இருக்கும் !

--.தினம் அன்றாடம் பெண்மணிகள் சாப்பாட்டுக்கு அரிசி எடுக்கும் போது ஒரு பிடி 

   தனியாக ஒரு டப்பாவில் போட்டு சேமிக்க வேண்டும்.(சிறு துளி பெரும் வெள்ளம்)

--ன்றாடம் செலவு செய்யும் போது தனியாக ஒரு டப்பாவில் சிறு தொகை ஒன்றை 

  தினம் போட வேண்டும். (அது எவ் வளவு சிறய தொகை என்றாலும் பரவவா  இல்லை)

--மாதம் ஒரு முறை நமக்கு ஆகாத துணிகளை ஒரு பெட்டியில் சேமிக்கவும்.

இவாறு சேமித்தவைகள் கொண்டு நம் பிறந்த நாள் , மற்றும் கல்யாண நாளுக்கு 

போன்ற விசேசங்களுக்கு சாப்பாடு, மற்றும் நலிந்தோருக்கு தேவையான அன்றாட 

தேவைகளை நிறைவேற்றலாம் ! நாம் செய்ய வேண்டும் என்று நினைக்கும் போது 

நம்மிடம் பணம் பற்றாகுறை இருக்கும் . அபோது இந்த அன்றாட சேமிப்பு நமக்கு 

கை கொடுக்கும். நாம் 4  பேருக்கு உதவிய மன திருப்தி இருக்கும். அன்றைய நாள் 

இனிதாக கடந்து இருக்கும். இவைகளை ப்ரீ ஆக இருக்கும் போது மனதில் 

அசை போட்டால் அதை விட சந்தோசம், திருப்தி வேறு என்ன உள்ள ளது?  

முக்கியமான நாட்களில் நம்மால் முடிந்த புளியோதரை, பொங்கல், தயிர் சாதம் 

போன்றவைகளை நம் கையால் சமைத்து உண்மைலேயே கஷ்ட படுபவர்களுக்கு 

கொடுக்கும்போது , நமக்கு திருப்தி யாக இருக்கும் . நம்மல் முடிந்த காரியம். !

இதனை மனதில் கொண்டு , நலம் நலமறிய ஆவல் என்ற புதிய பகுதி என்னுடைய

மற்றொரு ப்ளாக் நியூஸ் mgm2010 .blogspot .com  ஆரம்பித்து உள்ளேன். 

அனைவரும் அதன் விவரத்தை சென்று பார்த்து கருத்து சொல்ல அன்புடன் 

அழைக்கிறேன். அநைவரும் கை கோர்த்து நம்மால் முடிந்ததை செய்வோம் வாங்க.  

5 கருத்துகள் :

  1. தமிழ்10.காம் குழுவினர்:
    எதோ ஒரு காரணத்தினால் tamil10 உள்ளே செல்ல முடியவில்லை .ஹெல்ப் பண்ணுங்க plesae!

    பதிலளிநீக்கு
  2. நன்றி .
    தங்களின் ஆர்வம் மற்றும் முயற்சி
    உற்சாகத்தை அளிகிறது.
    என் நியூஸ் ப்ளோகில் முதலாவதாக
    இணைந்த தங்களுக்கு நன்றி,நல்வரவு !
    -----------------------------------------
    நலம் நலமறிய ஆவல் பகுதிக்கு என்ன காரணத்தில் தெரியவில்லை ஒருவரும்
    வரவில்லை. அனைவரும் நலமாக இருகார்களனு நம்புறேன்.

    பதிலளிநீக்கு

welcome