தாளிப்பதன் பயன்பாடு
நாம் சமைத்த உணவு எப்போது முழுமை பெறுகிறது தெரியுமா? அதனை தாளிக்கும் போதுதான். எல்லா சாமான்களையும் சரியாகப் போட்டாலும் தாளித்தால்தான் அந்த சமையல் ருசிக்கும்.
தாளிப்பது என்பது பெரும்பாலான நாட்டு உணவு முறைகளில் இல்லாத ஒன்றாகும். ஆனால் அந்த தாளிப்பில் எத்தனை ரகசியங்கள் ஒளிந்திருக்கின்ற என்று உங்களுக்குத் தெரியுமா?
தாளிக்கும் போது, கடுகு, சீரகம், உளுந்தம் பருப்பு, வெந்தயம், கறிவேப்பிலை போன்றவற்றைப் போடுகிறோம். இதில் ஒவ்வொன்றிலும் ஜீரணத்திற்கும், உடல் நலத்திற்கும் ஏற்ற நிறைய விஷயங்கள் இருக்கின்றன.
ஜீரணத்திற்கு உதவுவதிலும், மலச்சிக்கலைத் தவிர்க்கவும் கறிவேப்பிலை உதவுகிறது. வெந்தயமும், உளுந்தம் பருப்பும் உடலுக்கு குளிர்ச்சியை அளிக்கிறது. கடுகும், சீரகமும் ஜீரணத்திற்கு உதவுகிறது.
எனவே, தாளிப்பதை ஏனோ தேனாவென்று செய்யாமல் எல்லாவற்றையும் சரியாகப் போட்டு தாளித்துச் சாப்பிடுங்கள்.
கருத்துகள் இல்லை :
கருத்துரையிடுக
welcome