புதன், நவம்பர் 25, 2009

கார்த்திகை தீப வழிபாட்டுப் பலன்கள்



கார்த்திகை மாதம் தீபத் திருநாளன்று, அகல் விளக்குகளில் தீபம் ஏற்றி வழிபடுவது மரபு. வீட்டு வாசலில், விளக்கு ஒளியின் அணிவகுப்பு, பார்ப்பதற்கு கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். விளக்கேற்றி வழிபடும் போது, சில பூஜை விதிமுறைகளைக் கருத்தில் கொண்டு செய்தால், அஷ்டலட்சுமிகளும் உங்கள் இல்லத்தில் இஷ்டமாக வந்து குடியேறுவர் என்பது பெரியோர் வாக்கு.


விளக்கேற்றும் போது கடைப்பிடிக்க வேண்டிய சில முறைகள்:


தீபத்தை ஏற்றும் முறை:


ஒரு முகமாக ஏற்றினால் - மத்திமம்


இரு முகமாக ஏற்றினால் - குடும்ப சுகத்தைத் தரும்


மூன்று முகம் ஏற்றினால் - புத்திர சுகத்தை தரும்


நான்கு முகம் ஏற்றினால் - செல்வத்தை பெருக்கும்


தீபத்தை ஏற்றும் திசை:


கிழக்கு திசையில் ஏற்றினால், துன்பம் விலகும். மேற்கு திசையில் ஏற்றினால், கடன் தொல்லை, கிரக தோஷம் நீங்கும்; செல்வம் பெருகும். தெற்கு திசை பார்த்து ஒரு போதும் ஏற்றக் கூடாது.


தீபம் ஏற்றப் பயன்படுத்தும் திரி வகைகள்:


பஞ்சுத்திரி - குடும்ப ஒற்றுமை


தாமரைத் தண்டுத்திரி - முன்வினைப் பாவம் நீங்கும்


வாழைத்தண்டு நூல் திரி - சந்தானம் உண்டாகும்


வெள்ளெருக்குத் திரி- செல்வம் பெருகும்


புதுமஞ்சள் சேலைத்துண்டு திரி - அம்மன் அருள் கிட்டும்; பேய் சேஷ்டை நீங்கும்.


சிவப்பு சேலைத் துண்டு திரி - திருமணத்தடை, மலட்டுத் தன்மை நீங்கும்


வெள்ளைத் துண்டு திரி- குடும்ப நலன், உடல் ஆரோக்கியம் பெருகும்.


தீபத்திற்கு விடும் எண்ணெய்:


நெய் - சகல சம்பத்தும் பெருகும்


நல்லெண்ணெய் - எல்லா பீடைகளும் விலகும்; புகழ், தாம்பத்திய சுகம் கிடைக்கும்.


விளக்கெண்ணெய் - ப ந்துக்கள் உறவு விருத்தி


இலுப்பெண்ணெய் - தேவதைகள் அருள், தேவி பராசக்தி அருள் கிடைக்கும்


தீபம் ஏற்றும் போது கவனிக்க வேண்டியவை:


அதிகாலையில் 3 மணியிலிருந்து 5 மணி வரை தீபம் ஏற்றினால், வீட்டில் சர்வமங்களமும் பெருகும். விளக்கைத் திரியால் தூண்டி விட வேண்டும். பூஜை விளக்கைத் தானே அணைய விடக் கூடாது.


பூ, பால் துளி இவைகளைக் கொண்டு சமாதானமாக அணைக்க வேண்டும். வாயால் ஊதி அணைப்பது கூடாது. மாலையில் விளக்கேற் றும் போது, கொல்லைப் புறக் கதவை மூடி விட வேண்டும். வெள்ளி ஜோதியை பூஜை அறையில் வைத்தால், ஒரு பித்தளைத் தட்டின் மீதுதான் வைக்க வேண்டும். விளக்கை வெறும் தரையில் வைக்கக் கூடாது.


திருவிளக்கிற்கு பால், சர்க்கரை, கற்கண்டு கொண்டு நைவேத்தியம் செய்யலாம். கார்த்திகைத் திருநாளன்று அவல் பொரியில் வெல்லத்தைப் பாகு காய்ச்சி ஊற்றி 'கார்த்திகைப் பொரி' செய்து நைவேத்தியம் செய்து வழிபடுவது சிறப்பு.


கார்த்திகை தீபநாளன்று எல்லா தீபங்களையும் சுவாமி அறையில் வைத்து ஏற்றி கற்பூர தீபாராதனை செய்த பிறகு வாசலில் கோலத்தின் மீதும் படிகளின் ஓரங்களிலும் அழகு மிளிர வைக்கலாம்.


தீபத் திருநாளின் அருமை பெருமைகளை உணர்ந்து, விளக்கேற்றி வழிபட்டு, வாழ்வில் சகல வளங்களையும் பெற்று மகிழ்வோமாக!

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

welcome