வெள்ளி, செப்டம்பர் 10, 2010

விநாயக சதுர்த்தி



அன்பார்ந்த பதிவுலக நண்பர்களுக்கு விநாயக சதுர்த்தி வாழ்த்துக்கள் !!




யானைத்தலை, கழுத்துக்குக் கீழே மனித உடல், மிகப் பெரிய வயிறு, இடது பக்கம் நீண்ட தந்தம், வலது பக்கம் சிறிய தந்தம் ஆகியவை உள்ளன. நீண்ட தந்தம் ஆண் தன்மையையும், சிறிய தந்தம் பெண் தன்மையையும் குறிக்கும். அதாவது ஆண்,பெண் ஜீவராசிகள் அவருள் அடக்கம். யாநை அக்ரிணைப் பொருள், மனிதர் உயர்திணை. ஆக, அக்ரிணை , உயர்திணை அனைத்தும் கலந்தவர். பெரும் வயிறைக் கொண்டதால் பூதர்களை உள்ளடக்கியவர் 



















விநாயகருக்கு தும்பிக்கையுடன் சேர்ந்து ஐந்து கரங்களிருக்கிறது. துதிக்கையில் புனித நீர்க்குடம் வைத்துள்ளார். பின் வலது கைகளில் அங்குசம், இடது கையில் பாசக் கயிறு, முன்பக்கத்து வலது கையில் ஒடித்த தந்தம், இடது கையில் அமிர்த கலசமாகிய மோதகம் ஆகியவை இருக்கும். புனித நீர்க்குடம் கொண்டு உலக வாழ்வில் உழன்று தத்தளித்துக் களைத்துத் தன்னைச் சேரும் மக்களின் தாகம் தணித்து களைப்பைப் போக்கி பிறப்பற்ற நிலையை அளிக்கிறார். அங்குசம் யானையை அடக்க உதவும் கருவி. இவரது அங்குசமோ மனம் என்ற யானையைக் கட்டிப் போடும் வல்லமை படைத்தது. அதனால்தான் முகம் யானை வடிவில் இருக்கிறது. பாசக்கயிறு கொண்டு தன் பக்தர்களின் எதிரிகளைக் கட்டிப் போடுகிறார். ஒடித்த தந்தம் கொண்டு பாரதம் எழுதுகிறார். இது மனிதன் முழுமையான கல்வியைப் பெற வேண்டும் என்பதைக் குறிக்கிறது. இடது கையில் மோதகம் வைத்துள்ளார். சாதாரண மோதகம் அல்ல இது. உலகம் உருண்டை. மோதகமும் உருண்டை. உலகத்துக்குள் சகல உயிர்களுக்கும் அடக்கம் என்பது போல, தனக்குள் சகல உயிர்களும் அடக்கம் என்பதைக் காட்டுகிறது.







விநாயகரின் வடிவங்கள்.

1. யோக விநாயகர்
2. பால விநாயகர்
3. பக்தி விநாயகர்
4. சக்தி விநாயகர்
5. சித்தி விநாயகர்
6. வீர விநாயகர்
7. விக்ன விநாயகர்
8. வெற்றி விநாயகர்
9. வர விநாயகர்
10. உச்சிஷ்ட விநாயகர்
11. உத்தண்ட விநாயகர்
12. ஊர்த்துவ விநாயகர்
13. ஏரம்ப விநாயகர்
14. ஏகாட்சர விநாயகர்
15. ஏக தந்த விநாயகர்
16. துவி முக விநாயகர்
17. மும்முக விநாயகர்
18. துவிஜ விநாயகர்
19. துர்கா விநாயகர்
20. துண்டி விநாயகர்
21. தருண விநாயகர்
22. இரணமோசன விநாயகர்
23. லட்சுமி விநாயகர்
24. சிங்க விநாயகர்
25. சங்கடஹுர விநாயகர்
26. சுப்ர விநாயகர்
27. சுப்ர பிரசாத விநாயகர்
28. ஹுரித்திரா விநாயகர்
29. திரியாட் சர விநாயகர்
30. சிருஷ்டி விநாயகர்
31. நிருத்த விநாயகர்
32. மகா விநாயகர்





முழுமுதற்கடவுளை வணங்கி வழிபடும் முறையாக  தலையில்  குட்டிக்கொள்வதும் செவிகளை பிடித்து கொண்டு தோப்புக்கரணம் போடுதலும் பஞ்சபூத சுழற்சி முறையினை நடைமுறைப்படுத்தும் நிகழ்வாக அமைகிறது. தலை ஆகாய அம்சம், குட்டிக்கொள்ளுதல் நிலத்தின் அம்சமாகும். தோப்புக்கரணம் போடுதல் நிலத்தின் மேலுள்ள  நீர் அக்னியால் வாயுவாக்கப்படும் நிகழ்வு ஆகும்.  செவியை பிடித்துக்கொண்டு போடுதல் வாயு, ஆகாயத்துடன் ஒன்றுதல் ஆகும். (செவி - ஆகாய அம்சம்) பஞ்ச பூத சுழற்சி முறையை நடைமுறைப்படுத்தியபின் அற்புத ஆற்றல் கிடைக்கப்பெறுகிறது. இத்தகைய ஆற்றல் துணைக்கொண்டு  நற்செயல்களை செயலாற்ற முனையும் போது அவை அற்புத பலன்களை தரக்கூடியதாய் அமைகின்றன. இதுவே கணபதி வழிபாட்டின் தத்துவம்.





விநாயகருக்கு மிகவும் உகந்தது மோதகம் என்ற கொழுக்கட்டை. பிரும்மம் எப்படி சர்வ வியாபியாக விளங்குகிறதோ அப்படி விநாயகர் எங்கும் சர்வ வியாபியாக விளங்குகிறார். அப்படிப்பட்ட விநாயகர் தன் இல்லம் வரும் நாளினை குறிப்பினால் “ருந்ததி அறிந்து கொண்டாள்.
பிரும்மம் இந்த கண்டத்தில் எங்கும் நிறைந்திருக்கிறது என்ற ரகசியத்தை அறிந்த அருந்ததி இந்த உண்மையை உலகத்துக்கு எடுத்துக்காட்ட விரும்பினாள். அண்டம் என்ற பொருள், பூர்ணமாக நிறைந்திருக்கிறது என்ற பொருளின் உள்ளே அமிர்தமயமான பூர்ணத்தை வைத்து அதை தன் இல்லம் வரும் விநாயகருக்கு படைத்தாராம். விநாயகரும் அதனை ஏற்று அருந்ததி  தம்பதியருக்கு நல்வரங்களை அளித்தாராம். அந்த தத்துவம் நிறைந்த மோதகத்தை உலகோர் காண ஸ்ரீகணேசர் எப்போதும் தன் கையில் வைத்துக்கொண்டிருக்கிறார்.














கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

welcome