திங்கள், ஏப்ரல் 26, 2010
ஞாயிறு, ஏப்ரல் 25, 2010
உங்கள் மனதை அறிவோமா?
ஒன்று முதல் 63 , என்னுக்குள் ஒரு எண்ணை மனதில்
நினைத்துகொள்ளுங்கள். ஸ்டார்ட் கிளிக் செயுங்கள்!
இபொழுது ஆறு கார்டு கள் காட்டப்படும் .ஓவ்வறு கார்டிலும்
நீங்கள் நினைத்த எண் உள்ளதா? என்று எஸ் அலது நோ கிளிக்
பண்ணவும். இறுதியில் நீங்கள் நினைத்த எண் காட்டப்படும் .
ஓகே ரெடியா? .ஸ்டார்ட் ..
வெள்ளி, ஏப்ரல் 23, 2010
நியான் லைட் டெக்ஸ்ட்
நியான் லைட் டெக்ஸ்ட் உங்கள் ப்ளோக்கு கொடுத்து மிளிர விடுங்கள்
இந்த ஸ்க்ரிப்டை உங்கள் ப்ளாக் body , tags உள்ளே கொடுக்கவும்
இதன் நிறம் மற்றும் ஒளிரும் ஸ்பீட் அளவு தேவைக்கு ஏற்ப மாற்றி தரலாம் .
welcome , டெக்ஸ்ட் உங்களுக்கு விருப்பமான மெசேஜ் தரலாம் !
இந்த ஸ்க்ரிப்டை உங்கள் ப்ளாக் body , tags உள்ளே கொடுக்கவும்
இதன் நிறம் மற்றும் ஒளிரும் ஸ்பீட் அளவு தேவைக்கு ஏற்ப மாற்றி தரலாம் .
welcome , டெக்ஸ்ட் உங்களுக்கு விருப்பமான மெசேஜ் தரலாம் !
புதன், ஏப்ரல் 21, 2010
தர்மம்
சிந்திபோம் !
இன்றைய அவசர உலகத்தில் , விலைவாசி ஏற்றத்தில் , தர்மம் பற்றி
சிந்திக்க தான் எது நேரம் நமக்கு. ?. ஆடம்பரமான எந்திரமான வாழ்கையில்
தர்மம் பற்றி பேச மற்றும் நினைக்க நேரமும் மனமும் இடம் தரவில்லை.
மனித நேயம் பற்றி எப்படி தான் நினைக்க முடியும்.?
சரி .. இதற்கு தீர்வு? .. நமது அன்றாட பணிசுமையில், ஒரு சில நிமிடம்
நினைத்து நேரம் செலவிட்டாலே போதும்... மனித நேயம் நிலைத்து இருக்கும் !
--.தினம் அன்றாடம் பெண்மணிகள் சாப்பாட்டுக்கு அரிசி எடுக்கும் போது ஒரு பிடி
தனியாக ஒரு டப்பாவில் போட்டு சேமிக்க வேண்டும்.(சிறு துளி பெரும் வெள்ளம்)
--அன்றாடம் செலவு செய்யும் போது தனியாக ஒரு டப்பாவில் சிறு தொகை ஒன்றை
தினம் போட வேண்டும். (அது எவ் வளவு சிறய தொகை என்றாலும் பரவவா இல்லை)
--மாதம் ஒரு முறை நமக்கு ஆகாத துணிகளை ஒரு பெட்டியில் சேமிக்கவும்.
இவாறு சேமித்தவைகள் கொண்டு நம் பிறந்த நாள் , மற்றும் கல்யாண நாளுக்கு
போன்ற விசேசங்களுக்கு சாப்பாடு, மற்றும் நலிந்தோருக்கு தேவையான அன்றாட
தேவைகளை நிறைவேற்றலாம் ! நாம் செய்ய வேண்டும் என்று நினைக்கும் போது
நம்மிடம் பணம் பற்றாகுறை இருக்கும் . அபோது இந்த அன்றாட சேமிப்பு நமக்கு
கை கொடுக்கும். நாம் 4 பேருக்கு உதவிய மன திருப்தி இருக்கும். அன்றைய நாள்
இனிதாக கடந்து இருக்கும். இவைகளை ப்ரீ ஆக இருக்கும் போது மனதில்
அசை போட்டால் அதை விட சந்தோசம், திருப்தி வேறு என்ன உள்ள ளது?
முக்கியமான நாட்களில் நம்மால் முடிந்த புளியோதரை, பொங்கல், தயிர் சாதம்
போன்றவைகளை நம் கையால் சமைத்து உண்மைலேயே கஷ்ட படுபவர்களுக்கு
கொடுக்கும்போது , நமக்கு திருப்தி யாக இருக்கும் . நம்மல் முடிந்த காரியம். !
இதனை மனதில் கொண்டு , நலம் நலமறிய ஆவல் என்ற புதிய பகுதி என்னுடைய
மற்றொரு ப்ளாக் நியூஸ் mgm2010 .blogspot .com ஆரம்பித்து உள்ளேன்.
அனைவரும் அதன் விவரத்தை சென்று பார்த்து கருத்து சொல்ல அன்புடன்
அழைக்கிறேன். அநைவரும் கை கோர்த்து நம்மால் முடிந்ததை செய்வோம் வாங்க.
ஞாயிறு, ஏப்ரல் 18, 2010
பிராத்தனை
நம்மில் பலர் கடவுளை நம்புவோம்.
நமக்கு மீறிய சக்தி எபோழுதும் உண்டு.
பிரம்ம முகுர்த்தம் (4 -5 ) அதிகாலை விளக்கு ஏற்றி
கடவுளை வேன்டினால் நல்லது நடக்கும் !
பொதுவாக நமக்கு ஒன்று நடக்கவேண்டும்
என்றால் , நாம் இறைவனை வேண்டுவோம்.
நமக்காக மட்டும் இல்லாமல், பிறருக்காக நாம்
வேண்டுவோமா? எதோ நமால் முடிஞ்சது.
எனக்கு நீண்ட நாட்களாக ஏதாவது பிறருக்கு செய் ய
வேண்டும் என்று நினைப்பேன். அது பிராத்தனை ஒன்று
மட்டும் தான் சரி யானது ! கூட்டு பிராத்தனை.
நோயற்ற வாழ்வே குறையற்ற செல்வம்
எத்தனை மனிதர்கள் நோயுடன் போராடுகிரார்கள்?
பணம் இல்லாமல் கஷ்டபடுகிறார்கள் பாவம்.
அவர்களுக்காக நாம் கூட் டு பிராத்ரதனை செய்வோமா?
இது ஒரு சிறந்த மனித நேயம் ! அனைவரும் ஒன்று சேர்ந்து
ப்ராத்திப்போம்.. . இதை பற்றி எனக்கு கருத்து சொல்லுங்கள்.
சனி, ஏப்ரல் 17, 2010
டென்சன்
சிறுவர் முதல் பெரியவர் வரை இன்று டென்சன்
ஆட்டி படைக்கிறது ! கரணம் இல்லாமல் கோபம்
வருகிறது. அதை யார் மீதாவது திசைதிருப்புவது..
இதில் வெல்ல என்ன செய்ய வேண்டும்?
டென்சன் பல்வேறு நிலைகளில் பல்வேறு விதங்களில் மனிதர்களைப் பாதிக்கிறது. .எனவே டென்சன் எதனால் உண்டாகிறது, ?
சிறு குழந்தைகளை நாம் எப்படி நடத்துகிறோமோ, அவர்களுக்கு என்ன கற்றுத்தருகிறோமோ அதுதான் பொதுவாக அவர்களது குண நலங்களுக்கு அடிப்படையாகிறது. எனவே சிறு குழந்தைகளாக இருக்கும்பொழுதே அவர்களைப் பலருடன் பழகவும், பல சூழல்களைக் கையாளவும் கற்றுக்கொடுத்துவிடுவதும், குழந்தைகளை மட்டம் தட்டி, கேலி செய்யாமல் தட்டிக்கொடுத்து வளர்ப்பதும் மிகவும் அவசியம். சிறு குழந்தைகளாக இருக்கையில் பிறருடன் பேச, பழக வெட்கப்படும் குழந்தைகளை அப்படியே விட்டுவிடாமல், மெள்ள மெள்ளப் பலருடன் பழக வாய்ப்பினை உண்டாக்கி, பயிற்சி அளிக்க வேண்டும். இல்லாவிட்டால், வளர்ந்தபின், பள்ளி அல்லது கல்லூரியில் படிக்கையில், நான்கு பேருடன் பேசவோ, வெளியில் செல்லவோ நேர்கையில் டென்சன் அவர்கள் ஆக்கிரமிக்கப்பட்டுவிடக்கூடும். இத்தகையவர்கள் தமது ஆசிரியர்களிடன் தமது சந்தேகங்களைக் கேட்கவோ, தமது உடன் படிப்பவர்களுடன் பேசவோ நேரும்பொழுது அதிகக் கூச்சத்தாலும் பயத்தாலும் ஆக்கிரமிக்கப்பட்டுவிடுவர். பொது இடங்களுக்குச் செல்வது, சிறிய குழுவுடன் பேச நேர்வது இவை அவர்களுக்கு உண்டாக்கும்.
அதேபோல், சிறு குழந்தைகளாக இருக்கையில் கேலிக்கு ஆளாகி வளர்ந்தவர்கள், பெற்றோராலும் மற்றவர்களாலும் திட்டி, மட்டம் தட்டி வளர்க்கப்பட்டவர்கள், பெரியவர்களாகியபின் கூட எந்தச் செயலைச் செய்வதானாலும், குழப்பமும் பதட்டமும் அடைவார்கள். பிறருடன் பேசுகையில் கைகால்கள் நடுங்குதல், உடல் வியர்த்தல், புதிய இடங்களுக்குச் செல்லத்தயங்குதல் இவையெல்லாம் பதட்டமான மனநிலைக்கு அறிகுறி. தாழ்வு மனப்பான்மைக்குள் விழுந்துவிடுவதும் மனச்சோர்விற்கு ஆளாவதும் அதிகம். பதட்டம் என்ற ஒரு குணம் இவர்களது நேரத்தையும் ஆற்றலையும் விழுங்கி, இவர்களது திறமைகளைப் பிரகாசிக்க விடாமல் வீணடிக்கச் செய்கிறது.
நமது எண்ணங்களே நாம் வாழ்வின் அடிப்படை. நமது நேர்மறை எண்ணங்கள் நமக்கு நற்பலனையும், எதிர்மறை எண்ணங்கள் தோல்வியையும் உண்டாக்குகின்றன. தவறு செய்துவிடுவோமோ என்ற அச்சத்துடன் செய்யும் வேலைகள் தவறாகவேதான் முடியும். எனவே எதிர்மறையான சிந்தனைகள் தோன்றும்பொழுது கவனமாக உங்கள் மனத்தை வேறு நேர்மறை எண்ணங்களுக்குத் திருப்புங்கள்.
ஒரு தாளைக் கையில் எடுத்துக்கொள்ளுங்கள். உங்க உங்களிடம் உள்ள குறைபாடுகள் என்னென்ன? எந்தெந்த விஷயங்கள் உங்களுக்குப் டென்சன் தூண்டுகின்றன எனப் பட்டியலிடுங்கள். பின் நிதானமாக அக்காகிதத்தைக் கிழித்து குப்பைத்தொட்டியில் எறியுங்கள். இக்குறைபாடுகள் என்னை விட்டு வெகு விரைவில் நீங்கிவிடும் என்றும், இனி இச்சூழல் என்னை அச்சுறுத்தாது. இத்தகைய சூழலை எதிர்கொள்ளும் தெம்பு எனக்கிருக்கிறது என்றும் திடமான குரலில் உங்களுக்கு நீங்களே சொல்லிக்கொள்ளுங்கள். சுய அறிவுரை(Autosuggestion) என்ற இந்த முறை ஆழ்மனத்தில் உங்களைப் பற்றி நீங்களே பதித்து வைத்திருக்கும் தவறான பிம்பத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக அழித்துவிடும்.
உங்களிடம் உள்ள திறமைகள் மற்றும் உங்கள் நிறைகள் என்னென்ன என்பதைப் பட்டியலிடுங்கள் (குறைந்தபட்சம் பத்து).
வேகமாக ஓட வல்லவரா, சமையலில் திறமைசாலியா, பிறருக்கு உதவும் குணமும் மனமும் உள்ளவரா? என்னென்னவெல்லாம் உங்களுடைய நல்ல குணங்கள் அல்லது திறமைகள் என்று கருதுகிறீர்களோ அவை எல்லாவற்றையும் பட்டியலிட்டுப் பாருங்கள். உங்கள் மனம் சோர்வடைகையில் அப்பட்டியலை எடுத்துப் படித்துப் பாருங்கள்.
நீங்கள் என்னென்ன செய்ய விரும்புகிறீர்கள் அல்லது வாழ்வில் உங்கள் இலக்கு என்ன? இதைச் சற்று ஆழ யோசியுங்கள். இந்தப் பதட்டம் அதற்கு எந்த வகையில் தடையாக இருக்கும் என்பதைச் சிந்தித்து, "இதில் இருந்து நான் வெளியில் வந்தே தீருவேன். என் இலக்கை அடைந்தே தீருவேன்" என்று இரவில் படுக்கைக்குச் செல்லுமுன் நம்பிகையுடன் சொல்லுங்கள்.
காலை எழுந்தவுடன் கண்ணில் படுகின்ற மாதிரியான இடத்தில், நல்ல ஆரோக்கியமான பொன்மொழிகள், உற்சாகமூட்டும் சுவரொட்டிகள் இவை இருக்குமாறு ஏற்பாடு செய்துகொள்ளுங்கள். இரவு படுக்கைக்குச் செல்லுமுன், சிறியதோ பெரியதோ, உங்களுக்கு நடந்த நன்மை ஒன்றை நினைவு படுத்திக்கொள்ளுங்கள்.
எப்பொழுதும் ஏதாவது பரபரப்பாகச் செய்துகொண்டு இருங்கள். 'Idle man's brain is devil's workshop' என்பது ஆங்கிலப்பழமொழி. தனியாக இருக்கையிலும், வேலையில்லாமல் இருக்கையிலும் நமது மனக்குரங்கு பல கிளைகளில் தாவித்தாவிச் செல்லும். அவ்வாறு அக்குரங்கு தாவும் பல நினைவுக்கிளைகள் எதிர்மறையானதாக இருக்கும். எனவே மனத்தை அலைபாய விடாமல் ஒரு நிலைப்படுத்தவேண்டுமானால் உடலுக்கும் மனதிற்கும் வேலை கொடுத்துக்கொண்டே இருப்பது அவசியம்.
தியானம் பதட்டத்திற்கு அருமருந்து. தியானமும், மூச்சுப்பயிற்சியும் பதட்டத்தைப் பெருமளவு கட்டுப்படுத்தக் கூடியவை. முடிந்தால் முறையாக ஒரு குருவை நாடி தியானம், யோகா, பிராணாயாமம் முதலியவற்றைக் கற்றுக்கொள்ளுங்கள். முடியாத பட்சத்தில் மெல்லிய இசையை ஒலிக்க விட்டு (ஓம் என்ற ஒலி மனதை ஒருநிலைப்படுத்துவதற்குப் பெரிதும் உதவுகிறது. இல்லையென்றால் தியானத்திற்கென்றே சீராக ஒலிக்கும் இசைத்தட்டுகள் கிடைக்கின்றன, அவற்றையும் பயன்படுத்தலாம்.) கண்களை மூடி இசையினையும் உங்கள் சுவாசத்தையும் மட்டும் கவனித்தவாறு பத்து நிமிடங்கள் அமர்ந்திருங்கள். உங்கள் மனம் உங்கள் கட்டுப்பாட்டை விட்டு நழுவி வேறு எண்ணங்களுக்குச் செல்லத்தான் செல்லும். ஒவ்வொருமுறையும் அதை பிடித்து இழுத்து வருவது உங்கள் பொறுப்பு. நாள்பட நாள்பட தியானம் செய்வது பழகிவிடும். உங்கள் ஒருமுகப்படுத்தும் திறனும் கூடிவிடும்.
கூல் இந்த மாமந்திரம் டென்சனுக்கு மிகவும் அவசியம் !
செவ்வாய், ஏப்ரல் 13, 2010
திங்கள், ஏப்ரல் 12, 2010
உங்கள் ப்ளோகில் விசிடர்ஸ் வரவை அதிகரிக்க...
எந்த இடத்தில தேவையோ அங்கு சேருங்கள்.
நம் போஸ்டை வரிசை படுத்தும் முன்னணி தமிழ் வலை நிர்வாகிகள் தமிழிஷ்,
தட்ஸ்தமிழ், tamil10 , உளவு, திரட்டி, நியுஸ்பானை, தமிழ்மணம், தமிழ்வெளி,
தமில்லேர்ஸ் ,சங்கமம், போன்ற அணைத்து வலை நிர்வாகிகளை ஒரே கூரை
கீழ் , சிங்கிள் பட்டன் கிளிக் செய்து இனி உங்கள் ப்ளோகில் இருந்து செல்லலாம்.!
வெள்ளி, ஏப்ரல் 09, 2010
Windows XP
Windows XP துவக்க வழி காட்டி
இந்த operating சிஸ்டம் பற்றி எளிய தமிழில் விளக்கங்களுடன்
திரு ராமநாதன் தெளிவாக தொகுத்து தந்துள்ளார். download
புதன், ஏப்ரல் 07, 2010
ஜில் ஜில்
உஷ் அபப்பபா என்ன வெயில்..
இந்த மண்டையை பிளக்கும் வெயிலில் இருந்து எப்படி தப்பிப்பது ?
இதோ சில ஆலோசனை!!
வெளியில் போவது என்றால் ஒரே ட்ரிப்பில் எங்கு எங்கு செல்ல
வேண்டும் என்று முன்பே பட்டியல் போட்டு கொள்ளவும் .
மறக்காமல் தண்ணீர் பாட்டில் எடுத்து செல்லுங்கள்.
தாகமாக இருக்கு என்று கடையில் செயற்கை பானங்களை
குறிப்பாக கலர்புல்லாக உள்ள ட்ரிங்சை குடிகாதீர்கள் !
பின் விளைவுகள் உண்டு .. ஜாக்கிரதை !
லைம் ஜூஸ், மற்றும் பிரெஷ் ஜூஸ் சாப்பிடுங்கள்.
அதுவும் தரமான தண்ணீரில் தருகிறார்களா என்று உஷாராக
இருங்கள். இப்பொழுது கரண்ட் வேறு அடிக்கடி கட் ஆகுது ..
ஐஸ் கிரீம் மெல்ட் ஆகி இருக்கும். அதனால் தவிர்க்கவும்.
கோடை ஜலதோஷம் ஏற்பட வாய்புகள் அதிகம்.
இதோ ஜில் ஜில் டிப்ஸ் உங்களுக்காக..
இயற்கை ஜூஸ்புதினா இலை ஒரு கைப்பிடி , தோல் சீவிய இஞ்சி ஒரு துண்டு ,எலுமிச்சை -1 , தேன் 5 ஸ்பூன் , இளநீர் அல்லது தண்ணீர். - 2 . டம்ளர்
புதினா சுத்தம் செய்து இஞ்சியுடன் சேர்த்து நைசாக அரைத்துகொள்ளவும் இதை வடிகட்டி , எலுமிச்சை சாறு, உப்பு, தேன்சேர்த்து இளநீருடன் பருகவும் !.இந்த வெயிலில் வியர்வையால் இழக்கும் தாது சத்துகளைமீட்டு தரும் . தலை சுற்றல் , அஜீரண கோளாறுகளை நீக்கும்.---------------------------------------------------------------------------------------------------------
நீராகாரம்இரவு சாதத்தில் தண்ணீர் ஊற்றி வைத்து விடுங்கள் .காலையில் சாதத்தை நன்கு மோர் விட்டு கரைத்துபொடியாக வெட்டிய சின்ன வெங்காயம், கருவபில்லைகொத்தமல்லி ,இஞ்சி ,போட்டு கலக்கவும். பருகவும்.!!இது பழய கால ட்ரிங்க்ஸ் என்றாலும்.. கோடை வெயிலின் உடல்சூட்டை குறைக்கும். யூரினரி இன்பெக்சன்ஸ் வராது.---------------------------------------------------------------------------------------------------------
பானகம்புளி ௦௦ நூறு ௦௦ கிராம் ,வெல்லம் 2oo கிராம் ,சுக்கு, ஏலக்காய் சிறிது.புளி தண்ணீரில் வெல்லதை கெட்டியாக கரைத்து கொளவும்இதில் சுக்கு,ஏலக்காய் சேர்த்து ,தண்ணீர் கலந்து வைத்து பருகலாம் .இது சக்தி தரும் ட்ரிங்க் குளிர்ச்சி யானதும் கூட ..
கொளுத்தும் கோடையை கூலாக கொண்டாடுங்க!
ஞாயிறு, ஏப்ரல் 04, 2010
வெள்ளி, ஏப்ரல் 02, 2010
வியாழன், ஏப்ரல் 01, 2010
விசிடிங் கார்டு
Newlite Business Card Printer
நீங்கள் பிசினஸ் மேக்னேட்டா? இதோ விசிடிங் கார்டு உங்களுக்கு.
quality bussiness கார்டு ஒரு நிமிடத்தில் தயார் செயலாம்.
கலர்,ஸ்டைல் சைஸ் மற்றும் எபக்ட்ஸ் textures உருவாகலாம்.
டெம்ப்ளேட்ஸ் உள்ளது~!background picture சேர்க்கலாம்..
உங்கள் கார்டை மெருகூட்டலாம்!!
நீங்கள் விரும்பும் விதத்தில் customise செய்யலாம்.
File->Explore Samples கிளிக் செய்து சாம்பிள் கார்டு பார்க்கலாம்.
File->New, the New Card Template விண்டோ மூலம் நியூ டிசைன் உருவாகலாம் !
உங்கள் கார்டு டைப் : horizontal மற்றும் vertical , 2 sided
என நீங்கள் விரும்பும் விதத்தில் தேர்வு செய்யலாம் .
modify டிசைன் மற்றும் drawing elements மூலம் உங்கள்
லோகோ மற்றும் designing element தீர்மானிக்கலாம் .
முடிவில் save செய்து,பிரிண்ட் preview பார்த்து
அச்சு அடித்து கொள்ளலாம். மேலும் ஹெல்ப்
மெனுவில் சென்று இதை உருவாகும் விதத்தை
நன்றாக தெரிந்து கொள்ளலாம்!!
click here to Download ..